பதிவு செய்த நாள்
06 ஏப்2021
21:07
புதுடில்லி:தத்வா சிந்தன் பார்மா கெம் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடன் விண்ணப்பித்துள்ளது.
வதோதராவைச் சேர்ந்த இந்த நிறுவனம் சிறப்பு ரசாயன தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் அதனுடைய பெரும்பாலான தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 450 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டு உள்ளதாக விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.இந்த பங்கு வெளியீட்டின்போது 225 கோப்டி ரூபாய் மதிப்பிற்கு புதிய பங்குகளையும் தற்போதைய நிறுவனர்களிடம் இருக்கும், 225 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை விரிவாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அபிவிருத்தி, பொதுவான நிர்வாக செலவுகள் ஆகியவற்றுக்காக செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம், 263 கோடி ரூபாய் வருவாயையும், 38 கோடி ரூபாய் லாபத்தையும் ஈட்டியுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|