பதிவு செய்த நாள்
06 ஏப்2021
21:18
புதுடில்லி:இந்தியாவில் உள்ள, 8 முக்கியமான நகரங்களில், வீடுகள் விற்பனை, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், கிட்டத்தட்ட, 44 சதவீதம் அளவுக்கு அதிகரித்து இருப்பதாக சொத்து ஆலோசனை நிறுவனமான, ‘நைட் பிராங்க் இந்தியா’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:இந்தியாவில் இருக்கும் முக்கியமான, 8 நகரங்களில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் தேவை அதிகரித்ததை அடுத்து, 72 ஆயிரம் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.இந்த விற்பனை அதிகரிப்பானது, கட்டுமான நிறுவனங்களுக்கு உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது.
மேலும், அவை புதிய திட்டங்களில் துணிந்து இறங்கவும் வாய்ப்பளித்து உள்ளது. மும்பையில், 49 சதவீதம் அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது. புனேவில், 75 சதவீதம் அதிகரித்துள்ளது.தெற்கு மாநிலங்களை பொறுத்தவரை, பெங்களூரில் 18 சதவீதமும்; ஐதராபாத்தில் 81 சதவீதமும்; சென்னையில் 36 சதவீதமும் அதிகரித்துஉள்ளது.
இருப்பினும், கொரோனா மீண்டும் அதிகரித்து வருவது இந்த துறையின் வளர்ச்சியை பாதிக்கும் அளவுக்கு இருக்குமா என்பது இனி தான் தெரியவரும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|