பதிவு செய்த நாள்
09 ஏப்2021
19:07
சென்னை:சிறு முதலீட்டாளர்கள் மட்டுமின்றி; குறு, சிறு நிறு வனங்கள் கூட, மியூச்சுவல் பண்டை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்து, ‘தினமலர்’ நடத்திய நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டப்பட்டது.
மியூச்சுவல் பண்டு முதலீடுகள் குறித்த விழிப்புணர்வை வாசகர்களிடம் ஏற்படுத்துவதற் காக, ‘தினமலர் _ ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் மியூச்சுவல் பண்டு’ இணைந்து, இரண்டாவது ‘வெபினார்’ நிகழ்ச்சியை, நேற்று நடத்தின. ‘மியூச்சுவல் பண்டின் வகைகள், அவற்றில் எவ்வாறு முதலீடு செய்வது?’ என்பது குறித்து இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், ‘ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்ஷியல் மியூச்சுவல் பண்டு’ நிறுவனத்தின் தெற்கு மண்டல தலைவர், எஸ்.ஹரிஷ், பிரபல நிதி ஆலோசகர் வ.நாகப்பன் ஆகியோர் பங்கேற்றனர். நெறியாளராக, பத்திரிகையாளர் ஆர்.வெங்கடேஷ் பங்கேற்றார்.மியூச்சுவல் பண்டின் வகைகள், குறிப்பாக, பங்கு சார்ந்த பண்டுகள், கடன் பத்திரங்கள் சார்ந்த பண்டுகள், கலப்பின பண்டுகள் ஆகியவை குறித்து, விரிவாக விளக்கப் பட்டன.
எஸ்.ஐ.பி., முறையிலான முதலீட்டில், வருவாயை முடிவு செய்துகொண்டு முதலீடு செய்வது தவறு. முதலீட்டு காலத்தை முடிவு செய்து கொண்டு, முதலீடு செய்வது தான் சரியாக இருக்கும் என்பதை விளக்கினார், வி.நாகப்பன்.முதலீட்டை, குறுகிய காலத்துக்கு மேற்கொள்வதை விட, நீண்ட காலத்துக்கு மேற்கொள்ளும்போது, வருமானம் எப்படி பல மடங்கு அதிகரிக்கிறது என்பதை எளிதாக புரியும்படி விளக்கினார், ஹரிஷ்.பங்கு சார்ந்த அல்லது கடன் சார்ந்த பண்டுகளில் முதலீடு செய்யாமல், ‘ஹைபிரிட்’ எனும், கலப்பின பண்டுகளில் முதலீடு செய்து, அதன் பிறகு மற்றவற்றுக்கு மாறுவது, நல்ல பலனை அளிக்கும் என விளக்கப்பட்டது.
குறு, சிறு நிறுவனங்களுக்கு, கடன் பத்திரங்களில் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே மேற்கொள்ளப்படும் முதலீடு, எப்படி லாபகரமாக இருக்கும் என்பது குறித்தும், நிபுணர்களால் எடுத்துச் சொல்லப்பட்டது.மொத்தத்தில், மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு, ஒரு வழியறியும் வாய்ப்பாக அமைந்தது, நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|