பதிவு செய்த நாள்
09 ஏப்2021
21:34
புதுடில்லி:கடந்த நிதியாண்டில், நேரடி வரி வருவாய், மதிப்பீட்டை விஞ்சி, 9.45 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது குறித்து, மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர், பி.சி.மோடி கூறியதாவது:கடந்த, 2020 – 21ம் நிதியாண்டில், நிறுவன வரியாக, 4.57 லட்சம் கோடி ரூபாய்; தனிநபர் வருமான வரி, 4.71 லட்சம் கோடி ரூபாய்; பங்கு பரிவர்த்தனை வரி, 16 ஆயிரத்து, 927 கோடி ரூபாய் என, மொத்தம், 12.06 லட்சம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.அதில், 2.61 லட்சம் கோடி ரூபாய், கூடுதலாக செலுத்திய வரி என்ற வகையில், திரும்பத் தரப்பட்டுள்ளது.
இதையடுத்து, நிகர நேரடி வரி வருவாய், 9.45 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. திரும்பத் தரப்பட்ட தொகை, 42 சதவீதம் அதிகம் என்ற போதிலும், நிகர வரி வசூல், மறு மதிப்பீட்டை விட, 5 சதவீதம் அதிகமாக உயர்ந்துள்ளது.
எனினும், 2019 – 20ம் நிதியாண்டின் நேரடி வரி வசூலை ஒப்பிடும் போது,10 சதவீதம் குறைந்து உள்ளது.கொரோனா, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையிலும், வரி வசூல் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|