கேனன் சினிமா இஓஎஸ் அம்பாசிடராக இணைந்தார் சந்தோஷ் சிவன்கேனன் சினிமா இஓஎஸ் அம்பாசிடராக இணைந்தார் சந்தோஷ் சிவன் ...  வேகமாக வளர முயற்சிக்கணும் பன்னாட்டு நிதியம் அறிவுறுத்தல் வேகமாக வளர முயற்சிக்கணும் பன்னாட்டு நிதியம் அறிவுறுத்தல் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தொடரும் கொரோனா: ஏலம் போகும் நகைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2021
19:27

கடந்த வாரம், ஒரு வணிக நாளிதழின், 6 பக்க இணைப்பு முழுதும் ஒரே விளம்பரம். அடகு வைக்கப்பட்ட நகைகள் அத்தனையும் ஏலத்துக்கு வந்துள்ள விபரத்தைச் சொல்லும் விளம்பரம் அது. இதேபோன்ற விளம்பரம் ஒன்று, 20 நாட்களுக்கு முன்பும் வெளியானது.

கால் சவரன், அரை சவரன் முதற்கொண்டு, 75 சவரன், 100 சவரன் நகை வரை கூட ஏலத்துக்கு வந்துவிட்டன. உரிய தொகை கட்டப்படாமல், ஏன் இவ்வளவு நகைகள் மூழ்கிப் போயின என்று நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தைச் சேர்ந்தோரிடம் விசாரித்தோம்.

அவர்கள் தெரிவித்ததாவது:நகைக்கடனில், ஒவ்வொரு மாதமும் வட்டி கட்டவேண்டும். அதுபோல் ஐந்து மாதங்கள் வரை வட்டி கட்டவில்லை என்றால், அரசுத் துறை வங்கிகள், அந்த நகைகளை ஏலத்துக்குக் கொண்டு வந்துவிடும். தனியார் நிதி, பண்டுகள் போன்றவை, 12 மாதங்கள் வரை காத்திருக்கும். அதற்கு மேல், 3 மாதங்கள் வரை ‘கிரேஸ்’ அவகாசம் கொடுக்கப்படும். இதற்குள் பலமுறை, நகை உரிமையாளருக்கு விதவிதமான கடிதங்கள், அழைப்புகள் அனுப்பப்படும். வட்டி செலுத்த வேண்டும் என்பது நினைவூட்டப்படும்.

அப்படியும் வட்டியைச் செலுத்தவில்லை என்றால் தான், நகைகள் ஏலத்துக்கு வரும். அதாவது, 15 மாத காத்திருப்புக்கு பின்னரே நகைகள் ஏலத்துக்கு வரும். கொரோனா ஏற்படுவதற்கு முன்பிருந்தே பலரும் தங்களிடம் இருந்த சிறு சிறு உருப்படிகளைக் கூட அடகு வைத்துவிட்டனர். தங்கத்தின் விலை உயர்ந்ததால், அடகு தொகையும் அதிகமாக கிடைத்தது. அன்றைக்கு அந்தப் பணம் தேவைப்பட்டதால், கூடுதலாக ரொக்கத்தை வாங்கிவிட்டனர்.கொரோனா காலத்தில் பலரால் அசலை மட்டுமல்ல, வட்டியையும் செலுத்த முடியவில்லை. அதுதான் இப்போது ஏலத்துக்கு வந்து நிற்கிறது.

பெரிய வங்கிகள், கடிதங்கள் அனுப்புவார்களே அன்றி, தொடர்ந்து வாடிக்கையாளர்களை தொடர்புகொண்டு, வட்டியையோ, அசலையோ கட்டுவதற்கு வலியுறுத்தமாட்டார்கள். அதனால் தான், நகைக் கடன் மூழ்கிப் போய்விடுகின்றன. இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமென்றால், இது தான் சமூகத்தின் தற்போதைய எதார்த்தம். ஏழை, எளியவர்கள் முதல் தள்ளுவண்டிக்காரர், சிறு கடைக்காரர் வரை எவரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீளவில்லை என்பதையே இந்த ஏலத்துக்கு வரும் நகைகள் சொல்கின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)