பதிவு செய்த நாள்
11 ஏப்2021
19:21
கடந்த நிதியாண்டு மற்ற துறைகள் போலவே ரியல் எஸ்டேட் துறைக்கும்
சவாலானதாகவே இருந்தது. கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் முதல் பாதியில் விற்பனையில் சரிவு ஏற்பட்ட நிலையில், இரண்டாம் பாதியில் மீட்சி உண்டானது. கடந்த ஆறு மாதங்களாக வீடுகளுக்கான தேவை அதிகரித்திருப்பதாக சொல்லப்படும் நிலையில், இந்த நிதியாண்டில் நிலைமை மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பின்னணியில் சொந்த வீடு வாங்க உள்ளவர்கள் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் வருமாறு:
தேவை அதிகரிப்பு:
கொரோனா பெருந்தொற்று சூழலில்,சொந்த வீட்டிற்கான தேவை அதிகரித்துள்ளது.
மேலும் சொந்த வீடு வாங்குபவர்கள், வீட்டின் அளவு பெரிதாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகின்றனர். வீட்டில் இருந்து பணியாற்றும் சூழல் இதற்கான காரணமாக அமைகிறது.
உடனடி வீடுகள்:
அதிகரிக்கும் தேவை காரணமாக, வாங்கியவுடன் குடியேற தயாராக உள்ள வீடுகளுக்கு கிராக்கி உண்டாகும்என கருதப்படுகிறது. பலரும் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளையே நாடுகின்றனர். இரண்டாம் அலை அச்சம் காரணமாககட்டுமான பணிகள் தாமதமானால், இந்த பிரிவில் மேலும்கிராக்கி அதிகரிக்கும்.
விலை போக்கு:
ரியல் எஸ்டேட் துறையில் நிலவிய தேக்கம்காரணமாக விலையும் அதிகம் உயராமல்
இருந்தது. தற்போது பெரிய வீடுகளுக்கான தேவை மற்றும் புதிய திட்டங்கள்குறைந்து
இருப்பதன் காரணமாக, ஒரு சில பிரிவுகளில் வீடுகளின் விலை உயரலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது. கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் பிரிவில் இதன் தாக்கம் அதிகம் இருக்கும்.
வட்டி விகிதம்:
வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை பொருத்தவரை இதுவரை மிகவும் சாதகமான போக்கு நிலவுகிறது.இது வரை இல்லாத அளவு வட்டி விகிதம் குறைவாகஅமைந்துள்ளது. ஆனால், வட்டி விகிதம் மேலும் குறையவாய்ப்பில்லை என கருதப்படுவதோடு, ஒரு கட்டத்தில் வட்டி விகிதம் உயரும் வாய்ப்பும் இருக்கிறது.
முதலீடு அல்ல:
ரியல் எஸ்டேட் துறை போக்குகளைநோக்கும் போது, சொந்த வீடு வாங்க காத்துஇருப்பவர்களுக்குஇது ஏற்ற நேரம் என கருதலாம். ஆனால், இது சொந்தபயன்பாட்டிற்கு மட்டுமே பொருந்தும். முதலீடு நோக்கில் வீடு வாங்குவதாக இருந்தால் மற்ற
அம்சங்களையும் பரிசீலித்துமுடிவு எடுக்க வேண்டும்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|