பதிவு செய்த நாள்
14 ஏப்2021
18:54
புதுடில்லி: ‘ஜி.ஆர்., இன்ப்ராபுராஜெக்ட்ஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 800 – 1,000 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த பங்கு வெளியீட்டின்போது, முழுக்க முழுக்க, நிறுவனர்கள் வசம் இருக்கும் பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. மொத்தம், 1.15 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
இந்த பங்கு விற்பனையில் குறிப்பிட்ட பகுதி, நிறுவனத்தின் தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளதாக விண்ணப்பத்தில் செபிக்கு தெரிவித்து உள்ளது.இந்நிறுவனம், இதற்கு முன், இரு முறை பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.
கடந்த, 2018 மே மாதத்தில், 1,800 கோடி ரூபாயை திரட்டும் வகையில், பங்கு வெளியீட்டுக் கான முயற்சியை மேற்கொண்டது. அதற்கு முன், 2016ல் ஒரு முறை முயற்சியை மேற் கொண்டது. இரண்டுமுறையும், செபியின் அனுமதி கிடைத்தும் சந்தை சூழல் சரியாக இல்லாத காரணத்தை முன்னிட்டு, பங்கு வெளியீட்டுக்கு வரும் முடிவை தவிர்த்து விட்டது.
இப்போது, மூன்றாவது முறையாக முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனம், உதய்பூரை அடிப்படையாக கொண்டதாகும். 17 மாநிலங்களில், நெடுஞ்சாலை மற்றும் சாலை திட்டங்களை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|