இந்திய தர நிர்ணய கழக சான்றிதழ் கட்டணத்தில் தள்ளுபடி இந்திய தர நிர்ணய கழக சான்றிதழ் கட்டணத்தில் தள்ளுபடி ...  பொதுத் துறை பங்குகள் மத்திய அரசு விற்பனை பொதுத் துறை பங்குகள் மத்திய அரசு விற்பனை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
புதிய பங்கு வெளியீட்டில் ஜி.ஆர்., இன்ப்ரா புராஜெக்ட்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2021
18:54

புதுடில்லி: ‘ஜி.ஆர்., இன்ப்ராபுராஜெக்ட்ஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.

இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 800 – 1,000 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த பங்கு வெளியீட்டின்போது, முழுக்க முழுக்க, நிறுவனர்கள் வசம் இருக்கும் பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. மொத்தம், 1.15 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

இந்த பங்கு விற்பனையில் குறிப்பிட்ட பகுதி, நிறுவனத்தின் தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளதாக விண்ணப்பத்தில் செபிக்கு தெரிவித்து உள்ளது.இந்நிறுவனம், இதற்கு முன், இரு முறை பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

கடந்த, 2018 மே மாதத்தில், 1,800 கோடி ரூபாயை திரட்டும் வகையில், பங்கு வெளியீட்டுக் கான முயற்சியை மேற்கொண்டது. அதற்கு முன், 2016ல் ஒரு முறை முயற்சியை மேற் கொண்டது. இரண்டுமுறையும், செபியின் அனுமதி கிடைத்தும் சந்தை சூழல் சரியாக இல்லாத காரணத்தை முன்னிட்டு, பங்கு வெளியீட்டுக்கு வரும் முடிவை தவிர்த்து விட்டது.

இப்போது, மூன்றாவது முறையாக முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனம், உதய்பூரை அடிப்படையாக கொண்டதாகும். 17 மாநிலங்களில், நெடுஞ்சாலை மற்றும் சாலை திட்டங்களை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)