மொத்த விலை பணவீக்கம்  8 ஆண்டுகளில் இல்லாத உயர்வு மொத்த விலை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத உயர்வு ...  பாடம் கற்றுக் கொண்டதால் பயமில்லை நுகர்பொருள் துறையினர் நம்பிக்கை பாடம் கற்றுக் கொண்டதால் பயமில்லை நுகர்பொருள் துறையினர் நம்பிக்கை ...
உலகின் பெரும் மோசடிக்காரர் அமெரிக்க சிறையில் மரணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2021
19:42

புதுடில்லி:உலகிலேயே மிகப் பெரிய அளவில் பண மோசடி செய்து மாட்டிக் கொண்ட, பெர்னார்டு லாரன்ஸ் மடோப் என்பவர் அமெரிக்க சிறையில், கடந்த, 14ம் தேதி அன்று இறந்து போனார். அவருக்கு வயது, 82.

அமெரிக்காவிலுள்ள நாஸ்டாக் பங்குச் சந்தையின் செயல்சாரா தலைவர் என்ற அளவுக்கு உயர்ந்தவர் இவர்.‘போன்ஸி’ எனும் மோசடி திட்டத்தின் மூலம் உலகெங்கிலும் பல்லாயிரக் கணக்கானோர் அவரிடம் ஏமாந்து போயினர். சரித்திரத்தில் இதுவரை இல்லாத வகையில், 4.60 லட்சம் கோடி ரூபாய் மோசடியின் சூத்ரதாரி இவர்.இவ்வளவு பெரிய மோசடியில் ஈடுபட்ட அவருக்கு, 2009ம் ஆண்டில், 150 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

கடைசியில் அவரிடமிருந்து , 30 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கைப்பற்றப்பட்டது.கடந்த, 1970 – 2000 வரையிலான காலத்தில், இந்த மோசடி திட்டத்தில் அவர் ஈடுபட்டிருந்தார். கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்த அவரின் இந்தத் திட்டம், மக்களை ஏமாற்றும் மிகப் பெரிய திட்டம் என, கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. 150 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மோசடி அம்பலமாகி, கிட்டத்தட்ட, 11 ஆண்டுகள் சிறையில் இருந்த அவர், பேரக் குழந்தைகளுடன் வீட்டிலிருந்தபடி இறக்க அனுமதிக்குமாறு கோரி இருந்தார். அவரது மனு நிராகரிக்கப்பட்டது.கடந்த, 14ம் தேதி, சிறையிலேயே அவர் உயிர் பிரிந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)