மார்ச் மாதத்தில் ஏற்றுமதி 60.29 சதவீதம் அதிகரிப்பு மார்ச் மாதத்தில் ஏற்றுமதி 60.29 சதவீதம் அதிகரிப்பு ...  மருந்து பொருட்கள் ஏற்றுமதி 18 சதவீதம் அதிகரிப்பு மருந்து பொருட்கள் ஏற்றுமதி 18 சதவீதம் அதிகரிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கிரெடிட் கார்டு வணிகத்திலிருந்து சிட்டி பேங்க் வெளியேறுகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2021
19:13

புதுடில்லி:அமெரிக்காவைச் சேர்ந்த, ‘சிட்டி’ நிறுவனம், இந்தியாவில், அதன் நுகர்வோர் வங்கி வணிகத்திலிருந்து வெளியேற இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், நுகர்வோர் வணிகத்துக்கு பதிலாக, நிறுவனங்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.நுகர்வோர் வங்கி வணிகத்தில் கிரெடிட் கார்டுகள், ரீட்டெய்ல் பேங்கிங், வீட்டுக் கடன்கள், சொத்து நிர்வாகம் ஆகிய வணிகங்கள் அடங்கும். இந்த பிரிவுகளில் இவ்வங்கி, கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது.

சிட்டி நிறுவனம் இந்தியாவில், கடந்த, 1902ம் ஆண்டில் நுழைந்தது. 1985ல் நுகர்வோர் வங்கி வணிகத்தில் இறங்கியது.சிட்டி வங்கிக்கு இந்தியாவில், 35 கிளைகள் உள்ளன. மேலும், 4 ஆயிரம் பேர் இந்த நுகர்வோர் வங்கி வணிக பிரிவில் பணியாற்றி வருகிறார்கள். இந்தியா உள்ளிட்ட, 13 நாடுகளில், நுகர்வோர் வங்கி வணிகத்திலிருந்து சிட்டி நிறுவனம் வெளியேற இருப்பதாக, அந்நிறுவனத்தின் உலகளவிலான தலைமை செயல் அதிகாரி ஜேன் பிரசெர் அறிவித்துள்ளார்.

இது குறித்து, சிட்டி இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆஷு குல்லர் தெரிவித்துள்ளதாவது:நிறுவனத்தின் அறிவிப்பால், இந்தியாவில், வங்கியின் செயல்பாட்டில் உடனடி மாற்றங்கள் எதுவும் இருக்காது. உடனடி பாதிப்புகள் எதுவும் ஊழியர்களுக்கும் இருக்காது. இப்போது இருப்பது போன்ற அதே கவனிப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் சேவைகள் தொடரும்.இவ்வாறு அவர் தெரிவித்துஉள்ளார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)