மார்ச் மாதத்தில் ஏற்றுமதி 60.29 சதவீதம் அதிகரிப்பு மார்ச் மாதத்தில் ஏற்றுமதி 60.29 சதவீதம் அதிகரிப்பு ...  மருந்து பொருட்கள் ஏற்றுமதி 18 சதவீதம் அதிகரிப்பு மருந்து பொருட்கள் ஏற்றுமதி 18 சதவீதம் அதிகரிப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மாருதி சுசூகி கார்கள் விலை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2021
20:31

புதுடில்லி:மாருதி சுசூகி நிறுவனம், அதன் குறிப்பிட்ட கார் மாடல்கள் சிலவற்றின் விலையை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட, 22 ஆயிரத்து, 500 ரூபாய் வரை கார்களின் விலையை அதிகரித்துள்ளது, இந்நிறுவனம்.

இது குறித்து இந்நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது: நிறுவனம் குறிப்பிட்ட சில மாடல் கார்களின் விலையை அதிகரித்துள்ளது. தயாரிப்புக்கு தேவைப்படும் உள்ளீட்டு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்ற காரணத்தால், இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்த விலை உயர்வு உடனே அமலுக்கு வருகிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கார்களின் சராசரி விலை உயர்வு, 1.6 சதவீதம் அளவுக்கு இருக்கிறது.கடந்த ஓராண்டு காலமாகவே, உள்ளீட்டு பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த காரணத்தால், அவை கார்களின் விலையில் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. எனவே, நிலைமையை சமாளிக்க, ஏப்ரலில் இருந்து விலையை அதிகரிக்க இருப்பதாக, கடந்த மார்ச் மாதத்தில் மாருதி சுசூகி தெரிவித்துஇருந்தது.

இதற்கிடையே, கடந்த ஜனவரி, 18ம் தேதியன்று குறிப்பிட்ட சில மாடல் கார்களின் விலையை, 34 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்தது. தற்போது மீண்டும் விலையை உயர்த்தி இருப்பதாக அறிவித்துள்ளது.நடப்பு ஆண்டில், மாருதி மட்டுமின்றி, பல்வேறு நிறுவனங் களும், தங்களது தயாரிப்புகளின் விலையை அதிகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)