மார்ச் மாதத்தில் ஏற்றுமதி 60.29 சதவீதம் அதிகரிப்பு மார்ச் மாதத்தில் ஏற்றுமதி 60.29 சதவீதம் அதிகரிப்பு ...  மருந்து பொருட்கள் ஏற்றுமதி 18 சதவீதம் அதிகரிப்பு மருந்து பொருட்கள் ஏற்றுமதி 18 சதவீதம் அதிகரிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘‘சிட்டி பேங்க்’ வணிகத்தை வாங்க வங்கிகள் ஆர்வம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2021
20:15

புதுடில்லி:‘சிட்டி பேங்க்’ நிறுவனம், இந்தியாவில் கிரெடிட் கார்டு, வீட்டுக் கடன், சொத்து நிர்வாகம் உள்ளிட்ட சில்லரை வணிகங்களிலிருந்து வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த வணிகங்களை கைப்பற்ற பல வங்கிகள் முயற்சிகளை மேற்கொள்ள துவங்கி விட்டன.குறிப்பாக, கிரெடிட் கார்டு வணிகத்தை கைப்பற்ற, பல முன்னணி வங்கிகள் தயாராக இருக்கின்றன.சிட்டி வங்கி கிரெடிட் கார்டு, சொத்து நிர்வாகம், வீட்டுக் கடன் உள்ளிட்ட அடமானக் கடன் ஆகிய வணிகங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக விற்கவே முயற்சிக்கும் என, ‘மேக்குவாரி’ நிறுவனத்தின் பகுப்பாய்வாளர் சுரேஷ் கணபதி தன் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:கிரெடிட் கார்டு வணிகத்தை கையகப் படுத்துவதற்காக பல வங்கிகள் ஆர்வமாக இருக்கின்றன. ஆர்.பி.எல்., மற்றும் ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் போன்றவை சிறிய நிறுவனங்களாக இருந்தாலும், கிரெடிட் கார்டு வணிகத்தை கையகப்படுத்த மிக தீவிரமாக இருக்கும் எனக் கருதுகிறோம்.

சிட்டி பேங்க், கடந்த பல ஆண்டுகளாகவே கிரெடிட் கார்டு வணிகத்தில், சந்தை பங்களிப்பை இழந்து வந்துகொண்டிருந்தது.பெரிய தனியார் வங்கிகள், சிட்டி பேங்கின் அடமான கடன் வணிகத்தையும், சொத்து நிர்வாக வணிகத்தையும் கையகப்படுத்துவதில் ஆர்வம் காட்டும் எனக் கருதுகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, சிட்டி பேங்க் முடிவால், வாடிக்கையாளர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்தியாவை பொறுத்தவரை, சிட்டி பேங்கில், 30 லட்சம் சில்லரை வாடிக்கையாளர்கள் உள்ளனர். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளும், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களும் உள்ளனர்.

சிட்டி பேங்க் இத்தகைய வணிகங்களிலிருந்து வெளியேறும்பட்சத்தில், அதை வாங்க தகுதி யான நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின்னர், வாங்க இருக்கும் நிறுவனத்துக்கு, ரிசர்வ் பேங்க் அனுமதி வழங்க வேண்டும்.அடுத்து, வாங்கும் நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களின் வைப்பு நிதிகள், கடன், கிரெடிட் கார்டு ஆகியவற்றை தடையின்றி மாற்ற வேண்டும்.

இத்தகைய நடை முறைகள் ஒருபக்கம் இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு பெரிதாக எந்த பாதிப்புகளும் இருக்காது.மேலும், உடனடியாக எந்த மாற்றங்களும் இருக்காது. மாற்றத்துக்கு சிறிது காலம் ஆகும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)