மார்ச் மாதத்தில் ஏற்றுமதி 60.29 சதவீதம் அதிகரிப்பு மார்ச் மாதத்தில் ஏற்றுமதி 60.29 சதவீதம் அதிகரிப்பு ...  ஓட்டல் நிறுவனங்கள் மீள இன்னும் 3 ஆண்டுகள் ஆகலாம் ஓட்டல் நிறுவனங்கள் மீள இன்னும் 3 ஆண்டுகள் ஆகலாம் ...
மருந்து பொருட்கள் ஏற்றுமதி 18 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2021
20:16

புதுடில்லி:கடந்த நிதியாண்டில், இந்திய மருந்து நிறுவனங்களின் ஏற்றுமதி, 18 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட, 1.83 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது.

இதற்கு முந்தைய நிதியாண்டில், 1.54 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கே ஏற்றுமதி செய்யப் பட்டது.இது குறித்து, இந்திய மருந்துகள் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்து உள்ளதாவது:அண்மைக் காலமாக மருந்துகள் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த நிதியாண்டில், மார்ச் மாதத்தில், மிக அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாதத்தில் மட்டும், 48.5 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

உலக மருந்து சந்தைகள், 1 – 2 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி கண்ட நிலையில், அவற்றுக்கு மாறாக, இந்திய மருந்துகளுக்கான தேவைகள் அதிகரித்து உள்ளது.வரும் ஆண்டுகளில் தடுப்பு ஊசி ஏற்றுமதி காரணமாக, இந்தியாவில் நல்ல வளர்ச்சி காணப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கச்சலுகை திட்டம் காரணமாகவும் வளர்ச்சி அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவிலிருந்து, வட அமெரிக்காவுக்கு அதிகளவில் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. கிட்டத்தட்ட 34 சதவீதம் ஆகும்.இதையடுத்து, அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகியவற்றுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)