பதிவு செய்த நாள்
17 ஏப்2021
20:21
புதுடில்லி:தைவான் வெளிவர்த்தக மேம்பாடு கழகத்துடன் இணைந்து, அயல்நாட்டு வர்த்தக கழகம், ‘ஜவுளி உற்பத்திக்கான தீர்வு’ என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கை நடத்த உள்ளது. இக்கருத்தரங்கு வரும், 29ம் தேதி அன்று காலை, 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்தியா முழுவதுமிருந்து ஜவுளித்துறை சார்ந்தவர்கள் பங்கேற்கும் இக்கருத்தரங்கில், இந்தியா மற்றும் தைவான் நாடுகளின் நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதற்கான வழிவகைகள் குறித்து விவாதிக்கப்படும். ஜவுளித்துறை சார்ந்த நுட்பமான தொழில்நுட்ப தகவல்களையும், தற்போதைய சூழலுக்கு ஏற்ற வணிக யுக்திகளையும் இக்கருத்தரங்கம் வழங்கும். இந்நிகழ்ச்சி, https://www.youtube.com/watch?v=3zmW4OC2HoI என்ற தளத்தின் மூலம் நேரலை செய்யப்படும்.
இன்றைய காலகட்டத்தில், தைவான் ஜவுளித்துறை, சர்வதேச அளவி லான முக்கிய பிராண்டு கயளால் மிகவும் விரும்பப்படுகிற ஒன்றாக உள்ளது.இக்கருத்தரங்கில், தைவான் நாட்டைச் சேர்ந்த தொழில்துறை வல்லுனர்கள், ஜவுளித்துறையில் ஏற்பட்டிருக்கும் நவீன தொழில்நுட்பங்களின் சாதகங்களையும், அதனால் இந்திய ஜவுளித்துறையில் ஏற்படும் நன்மைகளையும் எடுத்துரைக்க உள்ளனர். கட்டணம் எதுவும் இல்லாத கருத்தரங்காகும் இது.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|