ஓட்டல் நிறுவனங்கள் மீள இன்னும் 3 ஆண்டுகள் ஆகலாம் ஓட்டல் நிறுவனங்கள் மீள இன்னும் 3 ஆண்டுகள் ஆகலாம் ... ஆயிரம் சந்தேகங்கள்: கொரோனா பாலிசி எடுக்கலாமா? ஆயிரம் சந்தேகங்கள்: கொரோனா பாலிசி எடுக்கலாமா? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கொரோனா 2-ம் அலையில் தவிர்க்க வேண்டிய தவறுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2021
20:47

கொரோனா இரண்டாம் அலை, நிதி நோக்கில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் பாதுகாத்து கொள்வதற்கான வழிகள்.


கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், நாடு முழுதும் இரண்டாம் அலை பாதிப்பு அச்சுறுத்த துவங்கிஇருக்கிறது. இரண்டாம் அலையின் தாக்கம் எப்படி இருக்கும்? மீண்டும் பொது முடக்கம் வருமா போன்ற கேள்விகள் ஒரு பக்கம் இருந்தாலும், கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தை பொருளாதார நோக்கில் எதிர்கொள்வதற்கான நிலையில் இருக்கிறோமா எனும் கேள்வி ஒவ்வொருவருக்கும் முக்கியமாகிறது.


நிதி பாதுகாப்பு


கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு எப்படி இருக்கும் என்பது நம் கைகளில் இல்லை என்றாலும், அதன் நிதி பாதிப்பை கட்டுப்படுத்துவது நிச்சயம் நம் கைகளில் இருக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு கற்றுத் தந்த நிதி பாடங்களை வழிகாட்டியாக கொள்வதோடு, தற்போதைய சூழலில் தவிர்க்க வேண்டிய முதலீட்டு தவறுகளையும் அறிந்து இருப்பது கைகொடுக்கும்.


கொரோனாவால் பணி இழப்பு, ஊதியக் குறைப்பு போன்ற பாதிப்புகள் உண்டானபோது, பலரும் வழக்கமான முதலீட்டை தொடர முடியாமல் தடுமாறினர்.தற்போது மீண்டும் அதே நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும் நிதி பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, முதலீட்டை தொடர்வதே ஏற்றது. ஏற்கனவே அவசர கால நிதியை உருவாக்கி வைத்துள்ளவர்கள் அல்லது கொரோனா அனுபவத்தால் அவசர கால நிதி தேவையை உணர்ந்தவர்கள், நிலைமையை சமாளித்து முதலீட்டை தொடரலாம். அதே போல, இரண்டாம் அலையில் சந்தையின் போக்கை கணிக்க முயன்று, அதனடிப்படையில் செயல்படுவதையும் தவிர்க்க வேண்டும்.


நிதி இலக்கு


எதிர்கால நிதி இலக்குகளுக்கு ஏற்ப முதலீட்டை தொடர வேண்டும். குறுகிய கால அடிப்படையில் முதலீடு முடிவுகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. சந்தையின் போக்கை வைத்து, முதலீட்டை விற்று வெளியேறி லாபம் பார்ப்பது அல்லது பீதியில் விற்பது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.


சம பங்குகள் அல்லது மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்துள்ளவர்கள், முதலீட்டின் அடிப்படை அம்சங்களை பரிசீலித்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப முடிவெடுப்பது பாதகத்தை ஏற்படுத்தலாம்.கடன் மற்றும் செலவு பழக்கத்தை பொறுத்தவரை, கட்டுப்பாடு மிக்க அணுகுமுறையை தொடர்வதே நல்லது. வாழ்வியல் தேவைக்கான கடன் வசதியை நாடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.


‘கிரெடிட் கார்டு’ பயன்பாட்டிலும் கவனம் தேவை. அவசர தேவைக்காக மட்டுமே கிரெடிட் கார்டை பயன்படுத்துவது நல்லது. முடிந்த வரை கடன் சுமையை குறைத்துக் கொள்ள வேண்டும். அதே போல, ‘ஆன்லைன்’ மூலம், ‘ஷாப்பிங்’ செய்ய வாய்ப்பு இருப்பதை பயன்படுத்தி, தேவையில்லாத பொருட்களை வாங்குவதையும் கைவிட வேண்டும்.பொருளாதார சிக்கல் ஏற்பட்டாலும், கடன்களுக்கான மாத தவணையை தொடர்ந்து செலுத்த வேண்டும். தேவை எனில், தங்க நகைக் கடன் வசதியை பயன்படுத்தி நிலைமையை சமாளிக்கலாம்.


கைவசம் உபரி தொகை இருந்தால், அதிக வட்டி கடனை அடைக்க முயற்சிக்க வேண்டும். வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் மிகக் குறைவாக இருப்பதால், முதலீடு நோக்கில் வீடு வாங்குவதை தவிர்க்க வேண்டும். வீட்டுக் கடன் பெற்றிருப்பவர்கள், குறைந்த வட்டி விகிதத்திற்கு மாறுவதன் மூலம் பலன் பெற முடியுமா என, பரிசீலிக்க வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)