பதிவு செய்த நாள்
20 ஏப்2021
20:01
திருப்பூர்:கடந்த நிதியாண்டில், நாட்டின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், 17.38 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.
கடந்த 2018 – 19 நிதியாண்டில், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு, 1.12 லட்சம் கோடி ரூபாய் என்ற நிலையை எட்டியது.இந்த வர்த்தகம், கொரோனாவால், 2019 – 20ம் நிதியாண்டில், 1.09 லட்சம் கோடி ரூபாயாக குறைந்தது. கடந்த நிதியாண்டில், ஏப்., முதல் ஆக., வரையிலான முதல் ஐந்து மாதங்களும், ஆடை ஏற்றுமதி வர்த்தகம் சரிவடைந்தே காணப்பட்டது.
இருப்பினும், 2020, செப்டம்பருக்கு பின், வளர்ச்சி நிலைக்கு திரும்பியது. ஆனாலும், வர்த்தகத்தில் வளர்ச்சி நிலை நீடிக்கவில்லை. டிச., முதல், மீண்டும் வர்த்தகம் வீழ்ச்சி அடைந்தது.அதனால், கடந்த நிதியாண்டுக்கான, நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், 90 ஆயிரத்து, 624 கோடி ரூபாயாக சரிந்து விட்டது.
இது, கடந்த 2019 – 20ம் நிதியாண்டை விட, 17.38 சதவீதம் குறைவு.பின்னலாடை ஏற்றுமதி திருப்பூர், லுாதியானா, கோல்கட்டா, பெங்களூரு போன்ற நகரங்கள், நாட்டின் பிரதான பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக மையங்களாக உள்ளன.கடந்த நிதியாண்டில், நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதி, 9.92 சதவீதம் பின்னடைவை சந்தித்துள்ளது.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|