‘அரசுக்கும் தொழில் துறையினருக்கும் இடையே முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும்’ ‘அரசுக்கும் தொழில் துறையினருக்கும் இடையே முழுமையான நம்பிக்கை இருக்க ... ...  ‘வணிகங்களை நிரந்தரமாக மூட வாய்ப்பளித்து விடக்கூடாது’ ‘வணிகங்களை நிரந்தரமாக மூட வாய்ப்பளித்து விடக்கூடாது’ ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ரயிலில் வாகனங்களை அனுப்புவதில் மாருதி சுசூகி சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
20:04

புதுடில்லி:மாருதி சுசூகி நிறுவனம், கடந்த, 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட, 7.2 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்களை இந்திய ரயில்வே வாயிலாக அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளது.

கடந்த நிதியாண்டில் மட்டும், 1.8 லட்சம் வாகனங்களை ரயில்வே மூலம் அனுப்பி இருக்கிறது, இந்நிறுவனம்.கடந்த 2016- – 17ம் ஆண்டில், அதிகபட்சமாக, 88 ஆயிரம் வாகனங்களை அனுப்பியிருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் தான் அதிகளவில் அனுப்பப்பட்டிருகின்றன.ரயில்கள் வாயிலாக வாகனங்களை அனுப்புவதன் மூலம், 3,200 மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வு ஈடுசெய்யப்பட்டுள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த நிதியாண்டில், ரயில் வாயிலாக அனுப்பப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை, அந்த ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையில், 13 சதவீதம் ஆகும். இது குறித்து, மாருதி சுசூகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான கெனிச்சி அயுக்கவா கூறியதாவது:தயாரிக்கப்பட்ட வாகனங்களை, ரயில்வே வாயிலாக கொண்டு செல்வது, பல நன்மைகளை வழங்குவதாக இருக்கிறது.

இது ஒரு சுத்தமான, சுற்றுச்சூழலுக்கு இணக்கமான போக்குவரத்து முறையாகும். இது, நெடுஞ்சாைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கிறது.இதன் காரணமாக, நாங்கள் ரயில்வே வழியான போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)