பதிவு செய்த நாள்
20 ஏப்2021
20:04
புதுடில்லி:மாருதி சுசூகி நிறுவனம், கடந்த, 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட, 7.2 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்களை இந்திய ரயில்வே வாயிலாக அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் மட்டும், 1.8 லட்சம் வாகனங்களை ரயில்வே மூலம் அனுப்பி இருக்கிறது, இந்நிறுவனம்.கடந்த 2016- – 17ம் ஆண்டில், அதிகபட்சமாக, 88 ஆயிரம் வாகனங்களை அனுப்பியிருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் தான் அதிகளவில் அனுப்பப்பட்டிருகின்றன.ரயில்கள் வாயிலாக வாகனங்களை அனுப்புவதன் மூலம், 3,200 மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வு ஈடுசெய்யப்பட்டுள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில், ரயில் வாயிலாக அனுப்பப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை, அந்த ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையில், 13 சதவீதம் ஆகும். இது குறித்து, மாருதி சுசூகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான கெனிச்சி அயுக்கவா கூறியதாவது:தயாரிக்கப்பட்ட வாகனங்களை, ரயில்வே வாயிலாக கொண்டு செல்வது, பல நன்மைகளை வழங்குவதாக இருக்கிறது.
இது ஒரு சுத்தமான, சுற்றுச்சூழலுக்கு இணக்கமான போக்குவரத்து முறையாகும். இது, நெடுஞ்சாைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கிறது.இதன் காரணமாக, நாங்கள் ரயில்வே வழியான போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|