பதிவு செய்த நாள்
20 ஏப்2021
20:06
புதுடில்லி:நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில், கொரோனா பரவலை முன்னிட்டு, பல்வேறு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில், பொருளாதார செயல்பாடுகளை முடக்குவது என்பது, வணிகங்களை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகுக்கும். மேலும், வேலை இழப்புகளும் ஏற்படும் என, இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இச்சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி குமார் ராஜகோபாலன் கூறி இருப்பதாவது:அத்தியாவசியமற்ற அல்லது உணவு அல்லாத பொருட்களுக்கான சில்லரை விற்பனை நிலையங்கள் மற்றும் ‘மால்’களை மூடுவது சரியான தீர்வாக இருக்காது. இந்த கட்டத்தில், பொருளாதார செயல்பாடுகளை முடக்குவது, கடந்த ஆண்டின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பார்த்தால், இது வணிகங்களை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகுக்கும். இதனால் லட்சக்கணக்கான வேலை இழப்புகள் ஏற்படும்.
சில்லரை விற்பனை தொழில், கடந்த ஆண்டு எதிர்கொண்ட பிரச்னைகளை மீண்டும் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசியமற்ற சில்லரை விற்பனை வணிகங்கள், உணவு அல்லாத சில்லரை விற்பனையகங்கள், மால்கள் ஆகியவை கடுமை யான கண்காணிப்புடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்.கொரோனா பரவலின் இரண்டாவது அலையை தடுக்கும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இருப்பினும், மாநிலங்களின் வேறுபட்ட தடை உத்தரவுகளால், சில்லரை விற்பனை தொழில், கடந்த ஆண்டு சந்தித்தது போன்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|