பதிவு செய்த நாள்
21 ஏப்2021
22:50
மும்பை:உள்நாட்டு தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பில், 0.5 சதவீதத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 10 – -11 சதவீதமாக இருக்கும் என, முன்பு கணித்திருந்த நிலையில், இப்போது அதில், அரை சதவீதத்தை குறைத்து 10- – 10.5 சதவீதமாக இருக்கும் என அறிவித்துள்ளது, இக்ரா.மேலும் இது குறித்து, தன்னுடைய அறிக்கையில், இக்ரா தெரிவித்துள்ளதாவது:மஹாராஷ்டிராவில் துவங்கி, பல்வேறு மாநிலங்களில் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.
இவை பொருளாதார செயல்பாடுகளை குறைப்பதாக இருக்கின்றன.இதன் காரணமாக நடப்பு நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி குறித்த முந்தைய கணிப்பிலிருந்து, 0.5 சதவீதத்தை குறைத்துக் கொள்வதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இக்ரா நிலைப்பாடு இப்படி இருக்க, ஜப்பானை சேர்ந்த தரகு நிறுவனமான, ‘நோமுரா’ நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 12.6 சதவீத மாக இருக்கும் என, அறிவித்திருந்த நிலையில், இப்போது அதே, 12.6 சதவீதத்தையே தொடர்வதாக தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|