பதிவு செய்த நாள்
21 ஏப்2021
22:51
புதுடில்லி:கொரோனா பரவல், காப்பீட்டு நிறுவனங்களுக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்து உள்ளது என்றும்; பாதிப்புகள் அதிகரிக்கும் பட்சத்தில், காப்பீட்டு பிரீமிய கட்டணம் அதிகரிக்க கூடும் என்றும், ‘மேக்ஸ் பூபா ஹெல்த் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தின், கிளைம் பிரிவின் இயக்குனர் பாபாதோஷ் மிஸ்ரா கூறியுள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:தொற்றுநோய் பரவத் துவங்கியதிலிருந்து, மருத்துவ பணவீக்கம் என்பது, காப்பீட்டு நிறுவனங்கள் இதுவரை கண்டிராத அளவுக்கு உயர்ந்துள்ளது.பல்வேறு காரணங்களை முன்னிட்டு, ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.முதல் அலையின் போதே நாங்கள் மோசமாக பாதிக்கப்பட்டோம். இரண்டாவது அலை, முதல் அலையை விட தீவிரமாக இருக்கிறது.
கிளைம் விகிதம் திட்டமிட்டதை விட மோசமாக இப்போதே இருக்கிறது.பிரீமிய தொகையில் எவ்வளவு மாற்றம் தேவைப்படுகிறது என்பது, தொற்று நோய் பாதிப்பு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தும்; நிறுவனங்களின் நிலையை பொறுத்தும் இருக்கிறது. ஆனால், ஒன்றை மட்டும் சொல்ல முடியும். தற்போதைய போக்கு நிலையானது அல்ல.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, விரைவில் காப்பீட்டு பிரீமியம், 25 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்பிருப்ப தாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|