பதிவு செய்த நாள்
22 ஏப்2021
19:51
புதுடில்லி:கடந்த நிதியாண்டில், ஏப்ரல் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில், நாட்டின் விவசாய பொருட்கள் ஏற்றுமதி, 2.64 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்றுள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, இது, 16.88 சதவீதம் அதிகமாகும்.
கொரோனா தாக்கத்தையும் மீறி, இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.விவசாய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:நாட்டின் விவசாய பொருட்கள் வர்த்தக உபரியானது தொடர்ச்சியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தாக்கம் இருந்தும், உணவு வினியோகத்துக்கு எந்த பாதிப்பும் இன்றி தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
விவசாய பொருட்கள் ஏற்றுமதியை பொறுத்தவரை, கோதுமை அதிகளவில் ஏற்றுமதி ஆகி இருக்கிறது. மதிப்பீட்டு காலத்தில் கோதுமை ஏற்றுமதி, 3,283 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டில் இது, 425 கோடி ரூபாயாக இருந்தது.மேலும் பாசுமதி அல்லாத அரிசி வகைகளின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. அத்துடன், மசாலா பொருட்கள், பருத்தி, காய்கறி, சோயா ஆகியவற்றின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது.
அரிசி ஏற்றுமதி அதிகரித்ததற்கு முக்கிய காரணம், இந்தியா புதிய சந்தைகளை கைப்பற்றியது ஆகும். குறிப்பாக பிரேசில், சிலி போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகியுள்ளது.இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|