பதிவு செய்த நாள்
22 ஏப்2021
19:58
புதுடில்லி:‘பியூச்சர்’ குழுமத்தை சேர்ந்த இரண்டு நிறுவனங்களான, ‘பியூச்சர் ரீட்டெய்ல் மற்றும் பியூச்சர் என்டர்பிரைசஸ் ’ஆகிய நிறுவனங்களின் கடன் மறுசீரமைப்பு திட்டம், ரிசர்வ் வங்கியால் அமைக்கப்பட்ட கே.வி.காமத் குழுவின் ஒப்புதல் பெற்றுள்ளது.
இக்குழுவானது, கொரோனா பாதிப்புக்கான ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் கீழ், இந்நிறுவனத்தின் கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு அனுமதி வழங்கி இருப்பதாக, தொழில் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: பியூச்சர் குழுமத்தின் இரு நிறுவனங்களுக்கான கடன் மறுசீரமைப்பு திட்டத்தை காமத் குழு ஏற்றுக் கொண்டு இருக்கிறது. இக்குழுமத்தை சேர்ந்த மேலும் இரண்டு நிறுவனங்களின் அதாவது, பியூச்சர் கன்ஸ்யூமர்ஸ் மற்றும் பியூச்சர் லைப்ஸ்டைல் ஆகிய நிறுவனங்களின் திட்டங்களும் ஏற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் கடன் பிரச்னைகளை தீர்ப்பதற்கான விதிமுறைகளை உருவாக்க, ரிசர்வ் வங்கி, கே.வி.காமத் தலைமையிலான ஐந்து உறுப்பினர்களை கொண்ட குழுவை அமைத்துள்ளது.பியூச்சர் குழுமத்தின் மறுசீரமைப்பு திட்டத்துக்கு, இக்குழுவின் அனுமதி கிடைத்திருப்பதை அடுத்து, அடுத்தகட்டமாக, ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|