பதிவு செய்த நாள்
23 ஏப்2021
20:55
புதுடில்லி:‘மாருதி சுசூகி’ நிறுவனம், அதன் குருகிராம், மானேசர் ஆலைகளில் ‘ஷிப்டு’களை குறைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக, நிறுவன தரப்பிலிருந்து தெரியவந்து உள்ளது.
இது குறித்து, நிறுவன வட்டாரங்கள் கூறும்போது, கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாநிலங்கள் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரித்தால், வாகனங்களுக்கான தேவை குறையும் என, நிறுவனம் கருதுகிறது.மேலும் பல தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல அனுமதி கேட்டு வருகிறார்கள்.
இதன் காரணமாக, ஆலைகளில் ஷிப்டுகளை குறைத்து விடலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தன.ஏற்கனவே நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா, கடந்த வாரம் பேசும்போது, நீடித்த ஊரடங்குகள் தேவையை குறைப்பதாக அமையும் என்றும்; முகவர்கள் தங்களுடைய ஷோரூம்களை அடைத்துவிடும் பட்சத்தில், ஆலையை இயக்குவது என்பது இயலாத காரியமாகிவிடும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|