அத்தியாவசிய பொருட்களுக்காக புதிய கட்டுப்பாட்டு அறை அத்தியாவசிய பொருட்களுக்காக புதிய கட்டுப்பாட்டு அறை ...  வீட்டுக் கடன் மாதத் தவணையை  தவறவிடுவதன் பாதிப்புகள் என்ன? வீட்டுக் கடன் மாதத் தவணையை தவறவிடுவதன் பாதிப்புகள் என்ன? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அவசர கால நிதியை சரியாக பராமரிப்பது எப்படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2021
18:59

ஒவ்வொருவரும் அவசர கால நிதியை உருவாக்கிக் கொள்வதோடு, அதை சரியான வழியில் பராமரிப்பதிலும் கவனம் செலுத்துவது அவசியம்.


ஒவ்வொருவரும் சேமிப்பு, முதலீடு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதோடு, தங்களுக்கான அவசர கால நிதியை உருவாக்கிக் கொள்வதும் அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. எதிர்பாராத நெருக்கடிகளின் போது, அடிப்படை செலவுகளை சமாளிக்க உதவும் சேமிப்பே, அவசர கால நிதி என குறிப்பிடப்படுகிறது. அவசர கால நிதி கையிருப்பு, அத்தியாவசிய செலவுகளை சமாளிக்க வழி செய்வதோடு, பண முடையால் ஏற்படும் மன உளைச்சலையும் தவிர்க்க உதவும்.



எவ்வளவு தேவை


பொதுவாக, ஆறு மாத கால அடிப்படை செலவுகளுக்கான தொகையை, அவசர கால நிதியாக வைத்திருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. இது, சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடலாம்.தற்போதைய கொரோனா சூழல், அவசர கால நிதி அவசியத்தை புரிய வைத்துள்ளதோடு, இந்த நிதி கூடுதலாக இருப்பதும் நல்லது என உணர்த்தியுள்ளது.


எனவே, அவரவர் சூழலுக்கு ஏற்ப அவசர கால நிதி அளவை தீர்மானித்துக் கொள்ளலாம். அதிக பாதிப்பிற்கான வாய்ப்புள்ளவர்கள் மற்றும் குடும்பத்தில் சார்ந்துள்ளவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளவர்கள், கூடுதல் தொகையை உருவாக்கிக் கொள்வது ஏற்றது.அவசர கால நிதியை உருவாக்கிக் கொள்வதோடு, அந்த நிதியை முறையாக பராமரிப்பதும் அவசியம்.


அவசர கால நிதி என்பது, தேவைப்படும் போது உடனடியாக எடுத்துக்கொள்ள அமைந்திருக்க வேண்டும் என்றாலும், இதை முழுதும் ரொக்கமாக வீட்டிலேயே வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். ரொக்கமாக கையில் இருந்தால், வேறு தேவைகளுக்காக இதை செலவு செய்து விடும் வாய்ப்பு அதிகம். இதனால், அவசர கால நிதியை உருவாக்கிய நோக்கம் பாதிக்கப்படலாம். எனவே, அவசர கால நிதியை பணமாக்கும் தன்மையுடன் முதலீடு செய்வது நல்லது.


சேமிப்பு கணக்கு



அவசர கால நிதியை முதலீடு செய்யும் போது, அது தரக்கூடிய பலனை விட, பாதுகாப்பு மற்றும் பணமாக்கும் தன்மையே முக்கியமானவை. அந்த வகையில், வங்கி சேமிப்பு கணக்கில் அவசர கால நிதியை வைத்து இருக்கலாம். சேமிப்பு கணக்கில் இந்த நிதியை போட்டு வைத்தால், தேவைப்படும் போது எளிதாக எடுத்துக் கொள்ளலாம்.மேலும், சேமிப்பு கணக்கிற்கான வட்டி வருமானமும் கிடைக்கும்; பணமும் பாதுகாப்பாக இருக்கும்.


‘ஜீரோ பாலன்ஸ்’ வசதி கொண்ட சேமிப்பு கணக்கு இன்னமும் அனுகூலமாக இருக்கும்.சேமிப்பு கணக்கு நல்ல வாய்ப்பு என்றாலும், கையில் இருக்கும் ரொக்கம் போலவே சேமிப்பு கணக்கில் இருந்தும் பணத்தை எளிதாக விலக்கிக் கொள்ளலாம். எனவே, அவசர நிதிக்கு என தனி சேமிப்பு கணக்கை துவக்கிக் கொள்ளலாம் அல்லது இந்த தொகையை குறுகிய கால வைப்பு நிதியில் போட்டு வைக்கலாம்.


தேவைக்கேற்ப பகுதி அளவு தொகையை வைப்பு நிதியாகவும், மீதித் தொகையை சேமிப்பு கணக்கிலும் வைத்திருக்கலாம். மியூச்சுவல் பண்டில் பரிட்சயம் உள்ளவர்கள், லிக்விட் பண்ட் வகை நிதியிலும் அவசர கால நிதியை முதலீடு செய்யலாம்.குறுகிய கால முதிர்வு கொண்ட நிதி சாதனங்களில் முதலீடு செய்யும் லிக்விட் பண்ட், அவசர கால நிதி முதலீட்டிற்கு ஏற்றதாக கருதப்படுகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)