அத்தியாவசிய பொருட்களுக்காக புதிய கட்டுப்பாட்டு அறை அத்தியாவசிய பொருட்களுக்காக புதிய கட்டுப்பாட்டு அறை ... இந்தியர்கள் அதிகம் விரும்பும் அஜினோமோட்டோ! ஆய்வில் தகவல் இந்தியர்கள் அதிகம் விரும்பும் அஜினோமோட்டோ! ஆய்வில் தகவல் ...
வீட்டுக் கடன் மாதத் தவணையை தவறவிடுவதன் பாதிப்புகள் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2021
19:12

வீட்டுக் கடன் என்பது நீண்ட கால பொறுப்பாகும். வீட்டுக் கடன் பெற்றவர்கள், கடனுக்கான மாதத் தவணையை தவறாமல் செலுத்தி வர வேண்டும். வாய்ப்பிருந்தால், கடனை முன்கூட்டியே அடைப்பதற்கும் திட்டமிடலாம். எனினும், எதிர்பாராத காரணங்களால், இடையே மாதத் தவணையை செலுத்த முடியாத நிலையும் ஏற்படலாம்.


அதிலும், கொரோனா பாதிப்பு நிலவும் தற்போதைய சிக்கலான சூழலில் இதற்கான வாய்ப்பு அதிகம். எனவே, மாதத் தவணையை தவறவிடுவதால் ஏற்படக்கூடிய விளைவுகளை அறிந்திருப்பது அவசியம்.

தாமத கட்டணம்:


கடனுக்கான தவணையை செலுத்த முடியாமல் போவதால், பலவிதமான பாதிப்புகள் ஏற்படலாம். கடன் தவணை தவறியதற்காக தாமத கட்டணம், அபராதம் மற்றும் அபராத வட்டியும் விதிக்கப்படலாம். அபராதம் என்பது மாதத் தவணை தொகையில், 1 முதல் 2 சதவீதமாக இருக்கலாம்.

அபராத வட்டி:


சூழ்நிலைக்கு ஏற்ப, சில நேரங்களில் கடன் தவணை தவறும் காலத்தில், நிலுவையில் உள்ள முழு தொகைக்குமான அபராத வட்டியை செலுத்த வேண்டியிருக்கலாம். தாமத கட்டணம் தவிர இந்த அபராதம் அமையும் என்பதால், இந்த தொகை கணிசமாகவும் அமையலாம்.

கிரெடிட் ஸ்கோர்:


தவணையை தவறவிடுவதால், கடன் தகுதியை தீர்மானிக்க உதவும் கிரெடிட் ஸ்கோரும் பாதிக்கப்படும். ஒரு முறை தவணையை செலுத்தாமல் இருப்பது, கடன் ஸ்கோரில், 70 புள்ளிகள் வரை பாதிப்பை ஏற்படுத்தலாம். மேலும், எதிர்காலத்தில் கடன் பெறும் வாய்ப்பை இது பாதிக்கும்.

கால அவகாசம்:


ஒரு மாத தவணையை செலுத்த முடியாமல் போனாலும், அடுத்த மாதம் செலுத்தி விட வேண்டும். ஏனெனில், கடைசியாக தவணை செலுத்திய பின், 90 நாட்களுக்குள் அடுத்த தவணையை செலுத்திவிட்டால், பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. இல்லை எனில், கடன் கணக்கு வாராக்கடனாக கருதப்படும்.

தீர்வு என்ன?


வாராக்கடனாக கருதப்படுவதன் பாதிப்பு தீவிரமாக அமையலாம். எனவே, இதை தவிர்ப்பதே நல்லது. நிதி நெருக்கடி இருந்தால் வங்கியை அணுகி, நிலைமையை விளக்கிக் கூறி, கடன் காலம் நீட்டிப்பு உள்ளிட்ட தீர்வை நாடலாம். கடனை வசூலிக்க, ஏலம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமையை வங்கி கையாளலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)