பதிவு செய்த நாள்
27 ஏப்2021
19:51
புதுடில்லி:வங்கி சாரா நிதி நிறுவனமான, ‘அரோஹன் பைனான்ஷியல் சர்வீசஸ்’ மற்றும் முன்னணி பால் நிறுவனமான, ‘டோட்லா டெய்ரி’ ஆகியவை, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.
இந்த இரு நிறுவனங்களும், கடந்த பிப்ரவரி, 15ம் தேதியன்று, செபியிடம் விண்ணப்பித்து இருந்தன.அரோஹன் பைனான்ஷியல் சர்வீசஸ், புதிய பங்கு வெளியீடு வாயிலாக, 1,750 – 1,800 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்ட திட்டமிட்டுஉள்ளது. பங்கு வெளியீட்டின் போது, இந்நிறுவனம், 850 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், பங்குதாரர்களின், 2.71 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
டோட்லா டெய்ரி, 50 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், நிறுவனர்கள் வசம் இருக்கும், 1 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.இதன் மூலம் திரட்டப்படும் நிதியைக் கொண்டு, கடன்களை அடைக்கவும், மூலதன செலவு தேவைகளுக்கு பயன்படுத்தவும், இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.டோட்லா, தென் மாநிலங்களில் அதிக செயல்பாடுகளை கொண்டு உள்ளது. உகாண்டா மற்றும் கென்யா ஆகிய நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|