பதிவு செய்த நாள்
27 ஏப்2021
19:53
புதுடில்லி:கடந்த நிதியாண்டில், மியூச்சுவல் பண்டில், 81 லட்சம் முதலீட்டாளர் கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த வளர்ச்சி நடப்பு நிதியாண்டிலும் தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான, ஆம்பி தெரிவித்து உள்ளதாவது: கடந்த நிதியாண்டில் மட்டும், 81 லட்சம் முதலீட்டாளர் கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மொத்த கணக்குகள் எண்ணிக்கை, 9.78 கோடி ஆக அதிகரித்து உள்ளது.இந்த வளர்ச்சி, நடப்பு நிதியாண்டிலும் தொடரும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
கடந்த, 2019 – 20ம் நிதியாண்டில், மொத்தம், 72.89 லட்சம் கணக்குகள் துவக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.முதலீட்டாளர்கள் தங்களுடைய நிதி இலக்குகளை அடைய, மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வதன் முக்கியத்துவம் குறித்து அதிகம் அறிந்து வருகின்றனர். இதை அடுத்து, மியூச்சுவல் பண்டுகளில் செய்யப்படும் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|