பதிவு செய்த நாள்
27 ஏப்2021
19:56
புதுடில்லி:கட்டி முடிக்கப்பட்ட மற்றும் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு இடையேயான விலை வித்தியாசம், 3 – 5 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக, சொத்து ஆலோசனை நிறுவனமான, ‘அனராக்’ தெரிவித்துள்ளது.
வித்தியாசம்
இது குறித்து, தன்னுடைய ஆய்வறிக்கையில் இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:கட்டி முடிக்கப்பட்ட மற்றும் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளின் விலைகளுக்கு இடையேயான வித்தியாசம், 3 – 5 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த, 2017ல் இது, 9 – 12 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.சென்னையில் இந்த வித்தியாசம், 2017ல், 9 சதவீதமாக அதிகரித்திருந்த நிலையில், தற்போது, 5 சதவீதமாக குறைந்துவிட்டது.
வாடகை
பெங்களூரில், 12 சதவீதமாக இருந்தது, தற்போது, 4 சதவீதமாக குறைந்துவிட்டது.மும்பை பெருநகர பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் விலை, ஒரு சதுர அடி, 10 ஆயிரத்து, 700 ரூபாயாகவும்; கட்டப்பட்டு வரும் வீட்டின் விலை, 10 ஆயிரத்து, 350 ரூபாயாகவும் உள்ளது.
நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்திலும், இந்த விலை வித்தியாசம் குறைந்து வருகிறது. முன்பெல்லாம் கட்டப்பட்டு வரும் வீடுகளையே மக்கள் விரும்பினர். ஆனால், இன்றைக்கு நிலைமை மாறி வருகிறது. கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்கினால், உடனடியாக குடியேறி, வாடகையை தவிர்க்கலாம் என கருதுகின்றனர்.
மேலும், கட்டுமான தாமதங்களில் சிக்க வேண்டியதிருக்காது என்றும் கருதுகின்றனர். ஜி.எஸ்.டி., கிடையாதுகட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு, ஜி.எஸ்.டி., கிடையாது என்பதும், அவர்களை ஈர்ப்பதாக இருக்கிறது.கட்டுமான நிறுவனங்களும் வீடுகளை விற்று, காசு பார்க்க நினைப்பதால், அவற்றுக்கு அதிக விலை நிர்ணயிப்பதில்லை.இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|