பதிவு செய்த நாள்
27 ஏப்2021
19:59
புதுடில்லி:அதானி போர்ட்ஸ் அண்டு எஸ்.இ.இசட்., நிறுவனம், கொரோனா தொடர்பான பொருட்களை ஏற்றி வரும் கப்பல்களுக்கான கட்டணங்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.
இத்தகைய கப்பல்கள் நிற்க முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.அதானி குழுமம், வளைகுடா நாடுகள், தாய்லாந்து, சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலிருந்து வரும் திரவ மருத்துவ ஆக்சிஜனை கொண்டு செல்வதற்காக, 12 கிரையோஜெனிக் டேங்கர்களையும் வாங்கியிருக்கிறது.
இது குறித்து, இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:நாடு, ஆக்சிஜன் தேவைக்காக காத்து இருக்கும் நிலையில், ஆக்சிஜன் மற்றும் அது சார்ந்த சாதனங்களை ஏற்றி வரும் கப்பல்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், இந்த கப்பல்களுக்கு கிடங்கு, கையாளுவது போன்ற எந்த சேவைகளுக்கும், கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த சலுகைகள் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|