பதிவு செய்த நாள்
27 ஏப்2021
20:01
புதுடில்லி:‘உருக்கு உற்பத்தியை விட, உயிர்களை காப்பாற்றுவது மிக முக்கியமானது’ என, ஜே.எஸ்.டபுள்யு குழுமத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.
மேலும், பெருந்தொற்று கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், உயிர்காக்கும் ஆக்சிஜன் வாயு பற்றாக்குறையை பூர்த்தி செய்ய உதவும் வகையில், ஜே.எஸ்.டபுள்யு திரவ மருத்துவ ஆக்சிஜனை அதிகளவில் வழங்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.
உருக்கு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, நாட்டில் இருக்கும் உருக்கு ஆலைகள், திரவ மருத்துவ ஆக்சிஜனை பல்வேறு மாநிலங்களுக்கு உற்பத்தி செய்து, வினியோகித்து வருகின்றன.இந்நிலையில் சஜ்ஜன் ஜிண்டால், ‘நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் எந்த வளமும் நாட்டிற்கு தேவைப்படும் வரை, நிறுவனத்தின் உற்பத்தி பாதிக்கப்படக் கூடும்’ என்றும் தெரிவித்து உள்ளார்.
வழக்கமாக, உருக்கு நிறுவனங்கள், மூன்றரை நாள் ஆக்சிஜன் இருப்பை வைத்திருக்கும் நிலையில், தற்போது இருப்பு, அரை நாளாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|