பதிவு செய்த நாள்
29 ஏப்2021
21:15
புதுடில்லி:தன்னுடைய நான்கு தயாரிப்பு ஆலைகளை, மே 1ம் தேதி முதல் தற்காலிகமாக மூடுவதாக, ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதிகரித்து வரும் கொ ரோனா பரவல் மற்றும் அது சம்பந்தமான தடை உத்தரவுகள் ஆகியவை காரணமாக, தன்னுடைய நான்கு உற்பத்தி ஆலைகளை தற்கா லிகமாக மூடுவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.உற்பத்தியை நிறுத்தி வைக்கும் இந்த காலகட்டத்தில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் தொற்று பாதிப்புகள் மற்றும் சந்தை நிலவரங்கள் ஆகியவற்றை பொறுத்து, உற்பத்தி குறித்த அடுத்த முடிவுகள் வரும் நாட்களில் எடுக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது. இந்த காலகட்டத்தில், அனைத்து ஹோண்டா அலுவலக ஊழியர்களும், வணிகத்தை தக்க வைத்துக் கொள்ளும் வகையில், வீட்டிலிருந்து பணியாற்றுவார்கள் என்றும் தெரிவித்து உள்ளது. இந்நிறுவனத்துக்கு ஹரியானா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆலைகள் உள்ளன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|