பதிவு செய்த நாள்
30 ஏப்2021
19:54
புதுடில்லி:ரொக்கமில்லா கொரோனா சிகிச்சைக்கான இறுதி கட்டண ரசீது வந்த, 60 நிமிடங்களுக்குள்ளாக, அது குறித்த ஒப்புதல் முடிவு எடுத்து தெரிவிக்க வேண்டும் என, இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அறிவுறுத்தி உள்ளது.
அப்படி அறிவித்தால் தான், மருத்துவமனை நிர்வாகம், அந்த படுக்கையை, அடுத்து சிகிச்சைக்காக காத்திருக்கும் வேறொரு நபருக்கு வழங்க முடியும் என்றும் தெரிவித்து உள்ளது.இந்த அறிவிப்பை, அனைத்து பொது மற்றும் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கி இருக்கிறது, ஆணையம்.
சிகிச்சை பெற்றவர்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதில் தாமதம் ஏற்படாத வகையில், அரை மணியிலிருந்து, ஒரு மணி நேரத்துக்குள்ளாக, அவர்களது ரொக்கமில்லா சிகிச்சைக்கான ஒப்புதல் குறித்து அறிவிக்கும்படி, காப்பீட்டு நிறுவனங்களிடம் தெரிவிக்குமாறு, ஆணையத்துக்கு டில்லி உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது.இதை தொடர்ந்து, இந்த அறுவுறுத்தலை வழங்கி இருக்கிறது, ஆணையம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|