பதிவு செய்த நாள்
30 ஏப்2021
19:56
புதுடில்லி:பெருந்தொற்று நோயின் இரண்டாவது அலை, நுகர்வு பொருட்கள் துறையின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து, இப்போதே சொல்ல முடியாது என, 'ஹிந்துஸ்தான் யுனிலீவர்' நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான சஞ்சீவ் மேத்தா கூறியுள்ளார்.
மேலும் கடந்த ஆண்டு ஜூலை பாதிப்பு போல இப்போது இருக்காது என்றும் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:நாட்டின் முழு கவனமும் இப்போது வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதில் இருக்க வேண்டும்.இந்நிலையில், நுகர்வு பொருட்கள் துறையில், தொற்றின் தாக்கம்எப்படி இருக்கும் என்பதை இப்போதே சொல்ல முடியாது.
நுகர்வு பொருட்கள்வினியோகங்கள் தொடர்ந்து வழக்கம் போல நடைபெற்று வருகின்றன. உள்ளூர் கட்டுப்பாடுகள் இருக்கும் இடங்களில் கூட, கடைகள் திறக்கப்படுகின்றன. வியாபாரங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே, இரண்டாவது அலை இத்துறையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இப்போதே கணிக்க முடியாது.என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கடந்த நிதியாண்டின், ஜூலை மாதத்தில் நடந்தது போன்று, இந்த நிதியாண்டின் ஜூலையில் இருக்காது என, நான் உறுதியாக நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|