பதிவு செய்த நாள்
01 மே2021
19:50
புதுடில்லி:நாட்டின், ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவைகள் வரி வசூல், இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த ஏப்ரல் மாதத்தில் வசூல் ஆகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல், 1.41 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் செய்ததிலிருந்து, இதுவரை இந்த அளவுக்கு வசூல் ஆனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த மார்ச் மாதத்தில், 1.23 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகியிருந்த நிலையில், ஏப்ரலில், 14 சதவீதம் அதிகரித்து, 1.41 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், இறக்குமதி சேவைகள் உள்ளிட்ட உள்நாட்டு பரிவர்த்தனைகள், 21 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த, 7 மாதங்களாக ஜி.எஸ்.டி., வசூல், ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியிருப்பதுடன், தொடர்ந்து நிலையாக அதிகரித்து வருகிறது.இப்படி, ஜி.எஸ்.டி., வசூல் தொடர்ந்து அதிகரித்து வருவது, இக்காலகட்டத்தில், நாடு, தொடர்ந்து பொருளாதார மீட்சியை கண்டுவருவதை உணர்த்துவதாக இருக்கிறது.
போலி பில்கள் உள்ளிட்டவற்றை மிக உன்னிப்பாக கவனித்து நடவடிக்கைகள் எடுக்கப் பட்டதும், வரி வருவாய் உயர காரணமாக அமைந்தது.ஏப்ரல் மாதத்தில், மொத்த ஜி.எஸ்.டி., வசூலில், மத்திய ஜி.எஸ்.டி., வசூல், 27 ஆயிரத்து, 837 கோடி ரூபாயாகவும், மாநில ஜி.எஸ்.டி., வசூல், 35 ஆயிரத்து, 621 கோடி ரூபாயாகவும் உள்ளது. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.,வசூல், 68 ஆயிரத்து,481 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இவ்வாறு நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|