ஆக்சிஜன் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் ஆக்சிஜன் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் ...  மருத்துவ காப்பீடு பாலிசியை   பராமரிக்கும் வழிமுறைகள் மருத்துவ காப்பீடு பாலிசியை பராமரிக்கும் வழிமுறைகள் ...
ஏப்ரல் ஜி.எஸ்.டி., வசூல் இதுவரை இல்லாத சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மே
2021
19:50

புதுடில்லி:நாட்டின், ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவைகள் வரி வசூல், இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த ஏப்ரல் மாதத்தில் வசூல் ஆகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல், 1.41 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் செய்ததிலிருந்து, இதுவரை இந்த அளவுக்கு வசூல் ஆனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த மார்ச் மாதத்தில், 1.23 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகியிருந்த நிலையில், ஏப்ரலில், 14 சதவீதம் அதிகரித்து, 1.41 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், இறக்குமதி சேவைகள் உள்ளிட்ட உள்நாட்டு பரிவர்த்தனைகள், 21 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த, 7 மாதங்களாக ஜி.எஸ்.டி., வசூல், ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியிருப்பதுடன், தொடர்ந்து நிலையாக அதிகரித்து வருகிறது.இப்படி, ஜி.எஸ்.டி., வசூல் தொடர்ந்து அதிகரித்து வருவது, இக்காலகட்டத்தில், நாடு, தொடர்ந்து பொருளாதார மீட்சியை கண்டுவருவதை உணர்த்துவதாக இருக்கிறது.

போலி பில்கள் உள்ளிட்டவற்றை மிக உன்னிப்பாக கவனித்து நடவடிக்கைகள் எடுக்கப் பட்டதும், வரி வருவாய் உயர காரணமாக அமைந்தது.ஏப்ரல் மாதத்தில், மொத்த ஜி.எஸ்.டி., வசூலில், மத்திய ஜி.எஸ்.டி., வசூல், 27 ஆயிரத்து, 837 கோடி ரூபாயாகவும், மாநில ஜி.எஸ்.டி., வசூல், 35 ஆயிரத்து, 621 கோடி ரூபாயாகவும் உள்ளது. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.,வசூல், 68 ஆயிரத்து,481 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இவ்வாறு நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)