பதிவு செய்த நாள்
02 மே2021
23:52
போதுமான மருத்துவ காப்பீடு பெற்றிருப்பதோடு, பாலிசியை உரிய காலத்தில் புதுப்பிப்பதும் முக்கியமானது. பாலிசி அளிக்கும் பாதுகாப்பு அம்சங்களை தொடர்ந்து பெறுவதை இது வழிவகுக்கும். பாலிசியை புதுப்பிக்காமல் இருப்பதால், பல வகை சிக்கல்கள் ஏற்படலாம்.
உதாரணமாக, கோரிக்கைகள் சமர்ப்பிக்காமல் இருப்பதற்கான, ‘நோ கிளைம்’ சாதகம் மற்றும் காத்திருப்பு கால பலன்களை இழக்கலாம். பாலிசி காலாவதியாகி புதிய பாலிசியை வாங்க நேரலாம். எனவே, மருத்துவ காப்பீடு பாலிசியை முறையாக பராமரிக்கும் வழிமுறைகளை அறிந்திருக்க வேண்டும்.
புது வகை பாலிசிகள்:
எண்ணற்ற வகையான காப்பீடு பாலிசிகள் அறிமுகம் ஆகியிருக்கின்றன. காப்பீடு முகவர்கள், சாதகமான அம்சங்கள் கொண்ட புதிய பாலிசிகளை பரிந்துரைக்கலாம். புதிய பாலிசியை வாங்குவதற்கு முன், ஏற்கனவே உள்ள பாலிசியில் அதே அம்சங்கள் இருக்கின்றனவா என பார்க்க வேண்டும்.
ஒப்பீடு தேவை:
பழைய பாலிசி முக்கிய அம்சங்களை கொண்டிருந்தால் அதை தொடர்வதே சிறந்தது. பாலிசியை புதுப்பிக்கும் போது, மற்ற பாலிசிகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். மேம்பட்ட அம்சங்கள் கொண்ட விரிவான பாலிசி இருந்தால், பாலிசியை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை பயன்படுத்தி புதிய பாலிசி பெறலாம்.
மற்ற அம்சங்கள்:
பாலிசியை புதுப்பிக்கும் போது, முந்தைய பாலிசியில் இல்லாத கூடுதல் பலன்கள் அளிக்கப்படுகின்றனவா என்பதையும் பரிசீலிக்க வேண்டும். மேலும், பாலிசி அளிக்கும் பாதுகாப்பு போதுமானதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். தேவை எனில், பாலிசி தொகையை உயர்த்திக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முக்கிய தகவல்கள்:
பாலிசியை புதுப்பிக்கும் போது தேவையான முக்கிய தகவல்களை அளிக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் ஏதேனும் புதிய நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அந்த தகவலை தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் பின்னர் தேவையில்லாத சிக்கல்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
சலுகை காலம்:
பாலிசியை புதுப்பிக்க பொதுவாக, 30 நாட்கள் வரை கூடுதலாக அவகாசம் அளிக்கப்படும். இந்த காலத்திற்குள் பாலிசியை புதுப்பிக்க வேண்டும். இதன் மூலம், பழைய பாலிசியில் உள்ள பல்வேறு சலுகைகளை தொடர்ந்து பெறலாம். மருத்து காப்பீடு பெற்றால் மட்டும் போதாது, அதை முறையாக பராமரிக்க வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|