மருத்துவ காப்பீடு பாலிசியை   பராமரிக்கும் வழிமுறைகள் மருத்துவ காப்பீடு பாலிசியை பராமரிக்கும் வழிமுறைகள் ...  சேவைக் கட்டணம்  வசூலிப்பது சரியா? சேவைக் கட்டணம் வசூலிப்பது சரியா? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வைப்பு நிதி கடன் வசதியை பயன்படுத்துவது எப்படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2021
00:00

வைப்பு நிதி மீது கடன் பெறும் வசதி வாய்ப்பை மட்டுமல்ல; அதன் முக்கிய அம்சங்களையும் அறிந்திருப்பது அவசியம்.


அவசர தேவைக்காக கடன் வசதியை நாடும் போது, தனிநபர் கடன், தங்க நகை கடன் போன்ற வழிகள் இருப்பதோடு, வைப்பு நிதி உள்ளிட்ட முதலீடுகள் மீது கடன் பெறும் வசதியும் இருப்பதை பலரும் அறிந்திருக்கலாம். குறைந்த செலவில், எளிதாக கடன் பெறுவதற்கான வழிகளில் ஒன்றாக வைப்பு நிதி கடன் அமைகிறது. வைப்பு நிதி மீது கடன் பெறுவது தொடர்பான வழிமுறைகள் மற்றும் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.


@subtitle@‘ஓவர் டிராப்ட்’@@subtitle@@


வைப்பு நிதி கடன் என்பது, மற்ற கடன் வசதி போன்றது தான். கடன் பெறுபவர் பணத்தை பெற்று, அதை வட்டியுடன் திரும்பிச் செலுத்துகின்றனர். வைப்பு நிதி மீது, இரண்டு விதமாக பணம் பெறலாம். வைப்பு நிதி மீது கடன் பெறுவது ஒரு வழி என்றால், ‘ஓவர் டிராப்ட்’ எனும் வசதி மூலம் பணம் பெறுவது இன்னொரு வழி.


ஓவர் டிராப்ட் வசதியில், வைப்பு நிதி தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட தொகை விலக்கிக் கொள்ள அனுமதிக்கப்படும். இதற்கேற்ப கடன் பெறுபவர், தேவையான பணத்தை பெற்றுக் கொள்ளலாம். திரும்பிச் செலுத்த கால வரம்பு இல்லை என்றாலும், அது வரை வட்டி செலுத்த வேண்டும்.வைப்பு நிதி மீதான கடன் என்பது, வைப்பு நிதியை அடமானம் வைத்து கடன் பெறுவது போன்றது. கடன் பெறுபவர், பணத்தை மாதத் தவணைகளில் திரும்பிச் செலுத்த வேண்டும். இதற்கான வட்டி வசூலிக்கப்படும்.


பொதுவாக, வங்கிகள் வைப்பு நிதி முதலீட்டிற்கான வட்டியை விட கூடுதலாக, 2 சதவீதம் கடனுக்காக வட்டியாக வசூலிக்கின்றன. உதாரணமாக, வைப்பு நிதி வட்டி, 7 சதவீதம் என்றால், கடனுக்கான வட்டி, 9 சதவீதமாக இருக்கலாம். எனினும், ஐந்தாண்டு வரி சேமிப்பு, ‘டெபாசிட்’ மீது கடன் பெற முடியாது.


@subtitle@கவனம் தேவை@@subtitle@@


வைப்பு நிதி கடன் வசதியை, ‘ஆன்லைன்’ மூலமும் பெறலாம். ஆனால், சில வங்கிகள் ஆன்லைனில் பெறக்கூடிய கடன் தொகைக்கு வரம்பு வைத்துள்ளது. அதிக தொகை தேவை எனில், கிளையை அணுக வேண்டும். அவசர தேவைக்கு வைப்பு நிதி கடன் கைகொடுக்கும் என்றாலும், இந்த வசதியை பயன்படுத்திக் கொள்வதில் கவனம் வேண்டும்.முதலீட்டை விலக்கிக் கொண்டு பணம் பெறுவதை விட, கடன் வசதி ஏற்றது. மேலும், வைப்பு நிதியை முன்னதாக விலக்கிக் கொள்ளும் போது, விதிக்கப்படும் அபராதத்தையும் தவிர்க்கலாம்.


ஆனால், கடன் தேவை வைப்பு நிதியை விட குறைவாக இருக்கும் போது மற்றும் குறிப்பிட்ட காலத்தில் நிச்சயமாக திரும்பிச் செலுத்த முடியும் எனும் போது, வைப்பு நிதி கடன் வசதியை நாடுவது ஏற்றது. அடிப்படையில் இது முதலீடு என்பதை மறந்து விடக்கூடாது. மற்ற வாய்ப்பு களை விட, இது சாதகமானதாக இருக்க வேண்டும். முதலீட்டை தொடரும் சாத்தியத்தையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். கடனை அடைப்பதில் சிக்கல் உண்டானால், முதலீடு பாதிக்கப்படுவதோடு, ‘கிரெடிட்’ ஸ்கோரும் பாதிப்புக்குள்ளாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)