சந்தையிலிருந்து வெளியேறும் அன்னிய முதலீட்டாளர்கள் சந்தையிலிருந்து வெளியேறும் அன்னிய முதலீட்டாளர்கள் ...  வலுவான நடவடிக்கை தேவை அரசுக்கு சி.ஐ.ஐ., கோரிக்கை வலுவான நடவடிக்கை தேவை அரசுக்கு சி.ஐ.ஐ., கோரிக்கை ...
தயாரிப்பு துறை வளர்ச்சி ஏப்ரலில் வேகம் குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2021
19:19

புதுடில்லி:பிரிட்டனைச் சேர்ந்த, ‘ஐ.எச்.எஸ்., மார்கிட்’ எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின், ஏப்ரல் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த ஏப்ரல் மாதத்தில், தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சியின் வேகம் குறைந்துள்ளது. கொரோனா நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், புதிய, ‘ஆர்டர்கள்’ மற்றும் உற்பத்தியின் வளர்ச்சி ஆகியவை குறைந்துவிட்டதால், ஏப்ரலில் வளர்ச்சி விகிதம் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை.

கடந்த மார்ச் மாதத்தில்,தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி, 55.4 புள்ளிகளாக இருந்த நிலையில், ஏப்ரலில், 55.5 புள்ளிகளாக உள்ளது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். இது குறித்து, ஐ.எச்.எஸ்., மார்கிட்டின் பொருளாதார இணை இயக்குனர் பொலியானா டி லிமா கூறியுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் மாதத்துக்கான முடிவுகள், புதிய ஆர்டர்கள் மற்றும் தயாரிப்பு ஆகியவற்றில் மந்தநிலை இருப்பதை காட்டியுள்ளன.தொற்று அதிகரிப்பதை அடுத்து, ஏற்கனவே நிதி பிரச்னைகளில் உள்ள நிறுவனங்கள், உலகளாவிய விலை அதிகரிப்பின் காரணமாக, தேவைகள் குறைவையும் சந்திக்கக்கூடும்.இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)