பதிவு செய்த நாள்
04 மே2021
19:29
புதுடில்லி:‘இந்தியா பெஸ்டிசைட்ஸ்’ நிறுவனம், ஐ.பி.ஓ., எனும், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.
இந்நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, கடந்த பிப்ரவரியில் செபிக்கு விண்ணப்பித்திருந்தது. இதை பரிசீலனை செய்து, தற்போது அனுமதி வழங்கி இருக்கிறது, செபி. இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 800 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளது.இதில், 100 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், 700 கோடி ரூபாய்க்கு, பங்குதாரர்கள் வசம் இருக்கும் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
புதிய பங்கு வெளியீட்டுக்கு முன்பாக, 75 கோடி ரூபாயை தனிப்பட்ட பங்குகள் விற்பனை வாயிலாக திரட்டவும் திட்டமிட்டுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த இந்நிறுவனத்துக்கு, இரண்டு தொழிற்சாலைகள் உள்ளன. புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியைக் கொண்டு, நடைமுறை மூலதன செலவுகளுக்கும், பொதுவான நிர்வாக தேவைகளுக்கும் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது.
வேளாண் வேதியியல் தொழில்நுட்ப பிரிவில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பிரிவில் இந்நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|