வைப்பு நிதி கடன் வசதியை பயன்படுத்துவது எப்படி? வைப்பு நிதி கடன் வசதியை பயன்படுத்துவது எப்படி? ...  ரிசர்வ் வங்கி -பணிகள் பாதிக்காமல் இருக்க ஏற்பாடு ரிசர்வ் வங்கி -பணிகள் பாதிக்காமல் இருக்க ஏற்பாடு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
மக்களிடம் ரொக்கப் பணம் கையிருப்பு 29 லட்சம் கோடி ரூபாயாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2021
19:33

புதுடில்லி:கொரோனாவை முன்னிட்டு, மக்களிடையே ரொக்க கையிருப்பு அதிகரித்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் தரவுகளின் படி, கடந்த ஏப்ரல், 23ம் தேதி நிலவரப்படி, மக்களின் கைகளில் ரொக்கப் பணம் இருப்பு, 29.07 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

பணப் பரிவர்த்தனை

மார்ச், 26ம் தேதி நிலவரப்படி இது, 28.59 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.ஒரு பக்கம், டிஜிட்டல் வாயிலான பணப் பரிவர்த்தனை அதிகரித்து வந்த போதும், மக்களிடையே ரொக்க பரிவர்த்தனையும் தற்போது கொரோனா பரவலால் அதிகரித்து வருகிறது.கடந்த ஏப்ரல் மாதத்தில், முதல் நான்கு வாரத்தில் மட்டும், 57 ஆயிரத்து, 800 கோடி ரூபாய் பணத்தை மக்கள் எடுத்துள்ளனர்.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, மக்கள், கைகளில் ரொக்க பணத்தை வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இதையடுத்தே, ஏ.டி.எம்., போன்றவற்றிலிருந்து பணத்தை எடுப்பது அதிகரித்து வருகிறது.‘ஜன் தன் யோஜனா’ஏ.டி.எம்., வாயிலாக பணம் எடுப்பது அதிகரிப்பதுடன், டிபாசிட்தாரர்கள் எடுத்த பணம் மீண்டும் வங்கிக்கு வரவில்லை என்கிறார்கள், ஏ.டி.எம்., ஆப்பரேட்டர்கள். மேலும் இதன் காரணமாக, பணம் புழக்கத்துக்கு வராமல், முடக்கப்படுகிறது என்கிறார்கள்.

தொற்றுநோய் பரவலுக்கு முன், ஏ.டி.எம்., வாயிலாக, சராசரி ரொக்க பணம் பெறுவது, 4,000 ரூபாயாக இருந்தது. அது தற்போது, 4,500 ரூபாயாக அதிகரித்துள்ளது. ‘ஜன் தன் யோஜனா’ கணக்கு வைத்திருப்பவர்களிடம் டெபிட் கார்டு இருப்பதால், அவர்களில் பெரும்பாலானோர், அவர்கள் கணக்குக்கு பணம் வந்த உடனேயே அதை எடுத்து விடுகிறார்கள் என்கின்றனர், வங்கி தரப்பினர்.

ரொக்க பணத்துக்கான தேவை தற்போது அதிகரித்திருப்பதால், ஏ.டி.எம்., மையங்களின் தேவையும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக, ஏ.டி.எம்., ஆப்பரேட்டர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)