பதிவு செய்த நாள்
04 மே2021
19:33
புதுடில்லி:கொரோனாவை முன்னிட்டு, மக்களிடையே ரொக்க கையிருப்பு அதிகரித்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் தரவுகளின் படி, கடந்த ஏப்ரல், 23ம் தேதி நிலவரப்படி, மக்களின் கைகளில் ரொக்கப் பணம் இருப்பு, 29.07 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
பணப் பரிவர்த்தனை
மார்ச், 26ம் தேதி நிலவரப்படி இது, 28.59 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.ஒரு பக்கம், டிஜிட்டல் வாயிலான பணப் பரிவர்த்தனை அதிகரித்து வந்த போதும், மக்களிடையே ரொக்க பரிவர்த்தனையும் தற்போது கொரோனா பரவலால் அதிகரித்து வருகிறது.கடந்த ஏப்ரல் மாதத்தில், முதல் நான்கு வாரத்தில் மட்டும், 57 ஆயிரத்து, 800 கோடி ரூபாய் பணத்தை மக்கள் எடுத்துள்ளனர்.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, மக்கள், கைகளில் ரொக்க பணத்தை வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இதையடுத்தே, ஏ.டி.எம்., போன்றவற்றிலிருந்து பணத்தை எடுப்பது அதிகரித்து வருகிறது.‘ஜன் தன் யோஜனா’ஏ.டி.எம்., வாயிலாக பணம் எடுப்பது அதிகரிப்பதுடன், டிபாசிட்தாரர்கள் எடுத்த பணம் மீண்டும் வங்கிக்கு வரவில்லை என்கிறார்கள், ஏ.டி.எம்., ஆப்பரேட்டர்கள். மேலும் இதன் காரணமாக, பணம் புழக்கத்துக்கு வராமல், முடக்கப்படுகிறது என்கிறார்கள்.
தொற்றுநோய் பரவலுக்கு முன், ஏ.டி.எம்., வாயிலாக, சராசரி ரொக்க பணம் பெறுவது, 4,000 ரூபாயாக இருந்தது. அது தற்போது, 4,500 ரூபாயாக அதிகரித்துள்ளது. ‘ஜன் தன் யோஜனா’ கணக்கு வைத்திருப்பவர்களிடம் டெபிட் கார்டு இருப்பதால், அவர்களில் பெரும்பாலானோர், அவர்கள் கணக்குக்கு பணம் வந்த உடனேயே அதை எடுத்து விடுகிறார்கள் என்கின்றனர், வங்கி தரப்பினர்.
ரொக்க பணத்துக்கான தேவை தற்போது அதிகரித்திருப்பதால், ஏ.டி.எம்., மையங்களின் தேவையும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக, ஏ.டி.எம்., ஆப்பரேட்டர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|