இந்தியாவில் 177வது விற்பனையகத்தைத் தொடங்கியுள்ளது வெஸ்ட்ஸைட்இந்தியாவில் 177வது விற்பனையகத்தைத் தொடங்கியுள்ளது வெஸ்ட்ஸைட் ...  தொற்றால் பாதிப்பை சந்தித்த சேவைகள்  துறை வளர்ச்சி தொற்றால் பாதிப்பை சந்தித்த சேவைகள் துறை வளர்ச்சி ...
ஸ்டெல்லாண்டிஸ் புதிய தலைமை நிர்வாகிகள் நியமனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2021
21:03

ஸ்டெல்லான்டிஸ் இந்தியா மற்றும் ஆசியா பசிபிக், இந்தியா மற்றும் சுற்றியுள்ள பிராந்தியத்திற்குள், தனது செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக முக்கிய தலைமை நிர்வாகிகள் நியமனம் குறித்து அறிவித்துள்ளது. நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி கார்ல் ஸ்மைலி புதிய நிர்வாகிகளின் நியமனங்கள் குறித்து அறிவித்தார்.

அதன்படி, ரோலண்ட் பசாரா இந்தியாவில் ஸ்டெல்லான்டிஸின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 2017-ம் ஆண்டிலிருந்து, ரோலண்ட் இப்பிராண்ட்டின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் மூத்த துணைத்தலைவராக சிட்ரோய்ன் இந்தியா செயல்பாடுகளை வெற்றிகரமாக வழிநடத்தியிருக்கிறார். சிட்ரோய்ன் பிராண்டின் சமீபத்திய அறிமுகம் மற்றும் இந்தியாவில் அதன் முதல் தயாரிப்பான சிட்ரோய்ன் சி5 ஏர்க்ராஸ் -ன் உற்பத்தி முதல் விற்பனை வரையிலான அனைத்து நடவடிக்கைகளும் இதில் அடங்கும். இவர் ஜீப் மற்றும் சிட்ரோய்ன் ஆகியவற்றின் தேசிய விற்பனை நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கான முழு பொறுப்பையும் ஏற்றிருக்கிறார். இப்பொறுப்புடன் இக்குழுமத்தின் உற்பத்தி செயல்பாடுகளையும் கவனித்து கொள்வார்.

மேலும், டாக்டர் பார்த்தா தத்தா இந்தியா மற்றும் ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் பொறியியல், வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (ஆர் & டி) செயல்பாடுகளுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். 2019 முதல் டாக்டர் பார்த்தா, எஃப்சிஏ இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக முன்னெடுத்து வழிநடத்தியிருக்கிறார். அப்போது அவரது தலைமையில் புதிய ஜீப் காம்பஸ் மற்றும் உள்நாட்டிலேயே ஒருங்கிணைத்து கட்டமைக்கப்பட்ட ஜீப் ராங்கலர் ஆகியன வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டன. டாக்டர் பார்த்தா 1999ம் ஆண்டு எஃப்.சி.ஏ நிறுவனத்தில் பொறியாளராக சேர்ந்தார்.

கடந்த இருபது ஆண்டுகளில், சர்வதேச தொழில்துறை மற்றும் வணிக நடவடிக்கைகள், நிர்வாகம், வணிக மேம்பாட்டுத் திட்டங்கள், பொறியியல் மற்றும் வாகன ஒருங்கிணைப்பு ஆகிய பிரிவுகளில் மூத்த தலைமை நிர்வாக பதவிகளில் பணியாற்றியுள்ளார். எஃப்.சி.ஏ.யில் அவர் பணிபுரிந்த காலத்தில், சென்னை மற்றும் புனேவில் உள்ள தொழில்நுட்ப மையங்களின் இயக்குநராகவும், சீனாவில் தயாரிப்பு பொறியியல் பிரிவு தலைமை நிர்வாகியாகவும் செயல்பட்டு இருக்கிறார்.

புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி கார்ல் ஸ்மைலி கூறுகையில், "திறமை வாய்ந்த சர்வதேச விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் நிர்வாகியான ரோலண்ட், இந்தியாவில் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக தனது புதிய பொறுப்பிற்கு ஆழ்ந்த வணிக அனுபவத்தின் அனுபவ வளத்தைக் கொண்டு வந்திருக்கிறார். இந்தியா, உலகளவில் எங்களது நிறுவனத்தின் முக்கிய வளர்ச்சி சந்தையாக இருப்பதால் அதிக கவனம் செலுத்துகிறோம். இந்தியாவில் ஜீப் பிராண்டின் உள்ளூர் மயமாக்கப்பட்ட தயாரிப்புத் திட்டத்தை செயல்படுத்தியதில் டாக்டர் பார்த்தா முக்கிய பங்கு வகித்தார். மேலும் இப்பிராந்தியத்திற்கான தயாரிப்பு செயல்பாட்டு யுக்தியை செயல்படுத்தும் குழுவிற்கு இவர் தலைமையேற்று வழிநடத்துவார். மேலும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை அடையாளம் கண்டு செயல்படுத்துவார்” என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)