பதிவு செய்த நாள்
05 மே2021
21:13
புதுடில்லி:‘கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.
இந்நிறுவனம் கடந்த பிப்ரவரியில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வர அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், இப்போது செபியிடமிருந்து அனுமதி கிடைத்துள்ளது. இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக, 700 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில், 200 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், பங்குதாரர்களின், 2.13 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
மேலும், தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு, குறிப்பிட்ட அளவிலான பங்குகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை கொண்டு, நிறுவனத்தின் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் கடனை அடைக்க உள்ளது.
இந்நிறுவனம் ஆந்திரா,தெலுங்கானாவில் மிகபெரிய, சுகாதார துறை சார்ந்த குழுமமாகும். இந்நிறுவனம், ‘கே.ஐ.எம்.எஸ்., ஹாஸ்பிட்டல்ஸ்’ எனும் பிராண்டில், 9 பல்நோக்கு மருத்துவமனைகளை நடத்தி வருகிறது. இவற்றில் மொத்தம், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|