பதிவு செய்த நாள்
06 மே2021
20:12
புதுடில்லி:கடந்த ஏப்ரலில், நாட்டின் மொத்த விலை பணவீக்கம், 1.7 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மார்கன் ஸ்டான்லி நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.
இது குறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த மார்ச்சில், நாட்டின் மொத்த விலை பணவீக்கம், 7.4 சதவீதமாக இருந்தது. இது, ஏப்ரலில், 9.1 சதவீதமாக அதிகரித்து உள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. மதிப்பீட்டு மாதத்தில், உணவுப் பொருட்கள் விலை குறைந்திருந்த போதிலும், உணவு சாரா பொருட்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. இதன் காரணமாக, மொத்த விலை பணவீக்கம் உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்தாண்டு ஏப்ரலில், பழங்கள், காய்கறிகள், பால், மாமிசம், முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விலை குறைந்துள்ளது. இதனால், கடந்த ஏப்ரலில், நாட்டின் சில்லரை பணவீக்கம், 3.9 சதவீதமாக, மிதமான அளவில் குறைந்திருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, முந்தைய மார்ச் மாதத்தில், 5.5 சதவீதமாக இருந்தது.
நாட்டின் தொழில் துறை உற்பத்தியும், ஏப்ரல் மாதம் அதிகரித்திருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|