மொத்த விலை பணவீக்கம் உயர்வு: மார்கன் ஸ்டான்லி மொத்த விலை பணவீக்கம் உயர்வு: மார்கன் ஸ்டான்லி ...  எல்.ஐ.சி.,க்கு சனிக்கிழமை விடுமுறை: நாளை அமல் எல்.ஐ.சி.,க்கு சனிக்கிழமை விடுமுறை: நாளை அமல் ...
ஊழியர் ஊக்குவிப்பு திட்டம் நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2021
20:15

புதுடில்லி:கொரோனா பிரச்னையால், மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ள ஊழியர்களின் நலன் கருதி, அவர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்கும் திட்டத்தை, பல நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.

ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் கொரோனா பிரச்னையால், அலுவலகம் அல்லது வீட்டில் இருந்து பணியாற்றுவோர், பல வகையில் நெருக்கடிக்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர்.

அச்சம்

வீட்டில் பணியாற்றுவதில் சிலருக்கு சங்கடங்கள் உள்ளன. அதுபோல, அலுவலகம் செல்லும் பலர், கொரோனா அச்சம் காரணமாக, மன அழுத்தத்துடன் வேலை பார்ப்பதாக, ஆய்வொன்று தெரிவிக்கிறது.இத்தகைய சூழலில், ஊழியர்கள் புத்துணர்வு பெறவும், மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பை பல நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

மும்பையைச் சேர்ந்த, கோத்ரெஜ் புராப்பர்ட்டீஸ் நிறுவனம், ஐந்து நாட்களுக்கு அலுவலகத்தை மூடி, ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்கியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த, கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம், ‘சுய அக்கறை தினம்’ என்ற திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள அதன் ஊழியர்களுக்கு இன்று விடுப்பு வழங்கியுள்ளது.

அத்துடன், பிறரை அக்கறையுடன் பார்த்துக் கொள்ளும் திட்டத்தின் கீழ், ஜூன் இறுதிக்குள், விடுப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்து உள்ளது.டில்லியைச் சேர்ந்த, ரெப்இந்தியா நிறுவனம், மே, 6 – 9ம் தேதி வரை, ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கி உள்ளது.

விடுப்பு

ஊழியர்கள், தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிடவும், தடுப்பூசி போட்டு கொள்ளவும், இந்த விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனமான, தஸ்ரா, ஏப்., 26 முதல் வரும், 9ம் தேதி வரை, 14 நாட்களுக்கு விடுப்பு வழங்கியுள்ளது. உடனடியாக பணிகளை நிறுத்தி, தங்கள் நலனையும், குடும்பத்தினரையும் கவனித்துக் கொள்ளுமாறு, இந்நிறுவனம், ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.இதுபோல, பல நிறுவனங்கள், ஊதியத்துடன் விடுப்பு அளிப்பது, ஊழியர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் சலுகை

கூகுள் நிறுவனத்தில், 1 லட்சத்து, 39 ஆயிரத்து, 995 பேர் பணியாற்றுகின்றனர். இந்தியாவில், 4 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இந்நிலையில், கூகுள் நிறுவனம், வாரத்தில், மூன்று நாட்கள் அலுவலகத்திலும், இரண்டு நாட்கள், தங்களுக்கு பிடித்தமான இடத்திலும் பணியாற்றும் திட்டத்தை அறிவித்துள்ளது. ‘‘அவரவர் வேலையின் தன்மைக்கேற்ப, வீடு, அலுவலகம் அல்லது வெளியிடங்களில் பணியாற்றலாம்,’’ என, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)