பதிவு செய்த நாள்
06 மே2021
20:16
புதுடில்லி:ரிசர்வ் வங்கி அறிவித்த ஊக்கச் சலுகை திட்டங்களுக்கு, பஞ்சாப் நேஷனல் வங்கியான – ‘பி.என்.பி.,’யின் தலைமை செயல் அதிகாரி, எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன ராவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா சவாலை சமாளிக்க, தனி நபர்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ஊக்கச் சலுகைகளை ரிசர்வ் வங்கி, தக்க சமயத்தில், அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.
வங்கிகள் கொரோனா கடன் கணக்கை துவக்கி, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், தனி நபர்களின் கொரோனா சிகிச்சைக்கும் கடன் வழங்க, 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.நுண் கடன் நிறுவனங்களுக்கு உதவ, 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, இரண்டு ஆண்டுகள் வரையிலான கடன் மறுசீரமைப்பு திட்டம், 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அரசு கடன் பத்திரங்களை வாங்குவது ஆகியவை, நிதிச் சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க துணை புரியும். ரிசர்வ் வங்கி சரியான சமயத்தில் தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|