பதிவு செய்த நாள்
08 மே2021
20:27
புதுடில்லி:கடந்த ஆண்டு ஏப்ரலில், கொரோனா பரவல் காரணமாக, நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, வாகன விற்பனை கிட்டத்தட்ட, பூஜ்ஜியத்துக்கு வந்தது.
இப்போது, இரண்டாவது அலை காரணமாக, பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, நடப்பு மே மாதத்தில், வாகன விற்பனை, 70 – 80 சதவீதம் அளவுக்கு சரிவை காணும் என, சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த ஆண்டை போல இல்லாமல் இம்முறை, கொரோனா தொற்றின் தீவிரத்தை பொறுத்து, மாநிலங்கள் ஊரடங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
டில்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு என, பல மாநிலங்கள் முழு ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன.இதன் காரணமாக, 75 சதவீத வாகன விற்பனை நிலையங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட, 20 ஆயிரம் முதல், 26 ஆயிரத்து, 500 ஷோரூம்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.இதனால் சில்லரை விற்பனை வருவாயை பொறுத்தவரை, 20- – 25 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|