பதிவு செய்த நாள்
08 மே2021
20:30
மும்பை:மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு, புதிய உச்சத்தை தொட்டு உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு, 211 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கொரோனா தாக்கம் ஒருபக்கம் இருப்பினும், பங்குச் சந்தை தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து, மூன்றாவது வர்த்தக நாளாக உயர்வைக் கண்டது. உலகளவிலும் சந்தைக்கு சாதகமான போக்கு இருந்ததன் காரணமாக, வெள்ளியன்று, நிறுவனங்களின் சந்தை மதிப்பு அதிகரித்தது.
மேலும், சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பெரும்பாலான நிறுவனங்களின் மார்ச் காலாண்டு முடிவுகளும், சந்தை உயர்வுக்கு காரணமாக அமைந்தன. இதற்கு முன், கடந்த மார்ச், 3ம் தேதியன்று, மும்பை பங்குச் சந்தையின் சந்தை மதிப்பு, 210 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இதன் பின், மார்ச், 25ம் தேதி, சந்தை மதிப்பு, 200 லட்சம் கோடி ரூபாய் என்ற நிலைக்கு கீழே சென்றுவிட்டது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று, மதிப்பு, 211 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து, சாதனை புரிந்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|