பதிவு செய்த நாள்
11 மே2021
19:40
சென்னை:கொரோனா பரவல் அதிகரிப்பால், ‘இந்தியா யமஹா மோட்டார்’ நிறுவனம், வரும் 15ம் தேதி முதல், 31ம் தேதி வரை, தன் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:நாடு முழுதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைக்குப் பின், 15ம் தேதி முதல், 31ம் தேதி வரை, பைக் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, காஞ்சிபுரம் மற்றும் உத்தர பிரதேச மாநிலம், சூரஜ்பூர் ஆலைகளில், உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
கொரோனா பரவலைத் தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், தொழிலாளர்களின் நலன், நிறுவனத்திற்கு மிக முக்கியம். வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தக பங்குதாரர்களுக்கு சிறந்த ஆதரவு அளிக்க, கார்ப்பரேட் அலுவலக ஊழியர்கள், வீடுகளில் இருந்து பணி புரிய அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|