பதிவு செய்த நாள்
11 மே2021
19:52
புதுடில்லி:நிதியமைச்சகத்தின் கருத்துகளை எதிரொலிக்கும் விதமாக, தர நிர்ணய நிறுவனமான, ‘பிட்ச்’ இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் பொருளாதார தாக்கம், முதல் அலையின் போது இருந்தது போல, கடுமையானதாக இருக்காது என தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:இந்தியாவில் தொற்றுநோய்களின் சமீபத்திய அலைகளிலிருந்து, பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி, 2020ம் ஆண்டை விடக் குறைவானதாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.ஊரடங்குகளை பொறுத்தவரை, அதிகாரிகள் மிக குறுகிய அளவிலேயே அவற்றை அமல்படுத்துகின்றனர்.
அரசாங்கம், நிறுவனங்கள், தனிநபர்கள் என அனைத்து தரப்பினருடைய அணுகல் முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் காரணமாக, இரண்டாவது அலையால் கடந்த ஆண்டு ஏற்பட்டதை போன்ற பொருளாதார பாதிப்புகள் இருக்காது.இவ்வாறு தெரிவித்து உள்ளது.மத்திய நிதியமைச்சகமும் அண்மையில், கடந்த ஆண்டை போன்ற பொருளாதார பாதிப்புகள் அதிகம் இருக்காது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|