பதிவு செய்த நாள்
12 மே2021
21:00
புதுடில்லி:நாட்டின், 'ஸ்மார்ட்போன்' சந்தை, நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில், 18 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியை பெற்றுள்ளது என்று ஆராய்ச்சி நிறுவனமான, ஐ.டி.சி., தெரிவித்துள்ளது.
ஐ.டி.சி., ஆராய்ச்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டின் ஸ்மார்ட்போன் சந்தை, மார்ச் காலாண்டில், 18 சதவீதம் வளர்ச்சி பெற்றாலும், ஜூன் காலாண்டில் சரிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்த காலகட்டத்தில், கொரோனா தாக்கம் அதிகரித்து இருப்பதால், சந்தை சரிவை காணக்கூடும்.
கடந்த மார்ச் காலாண்டில் மட்டும், மொத்தம், 3.80 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு விடப்பட்டது. இருப்பினும், இது அதற்கு முந்தைய, 2020 டிசம்பர் காலாண்டை விட, 14 சதவீதம் குறைவு ஆகும்.தடுப்பூசிகள் போடத் துவங்கியது, பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்தது ஆகியவை காரணமாக, சந்தையில் நம்பிக்கை அதிகரித்தது. ஆனால், இரண்டாவது அலை, அந்த நம்பிக்கையை குலைப்பதாக அமைந்துள்ளது.
இரண்டாவது காலாண்டில், சந்தை சோதனைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். எனினும், உடனடி தேவைகளை முதல் காலாண்டில் அதிகமாக விற்பனைக்கு விடப்பட்டவை வாயிலாக பூர்த்தி செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|