பதிவு செய்த நாள்
13 மே2021
21:13

புதுடில்லி:நடப்பு நிதியாண்டுக்கான, மத்திய அரசின், முதலாம் கட்ட தங்க பத்திர வெளியீடு, 17ம் தேதியன்று துவங்குவதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டுக்கான இந்த தங்க கடன் பத்திரங்கள், மே மாதம் துவங்கி, செப்டம்பர் மாதம் வரை மொத்தம், 6 கட்டங்களாக வெளியிடப்பட உள்ளன. இதில், முதலாம் கட்ட வெளியீடு, 17ம் தேதி துவங்கி, 21ம் தேதி வரை, 5 நாட்கள் நடைபெறும் என, நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
முதலாம் கட்ட வெளியீடு, 21ம் தேதி முடிவடைந்து, 25ம் தேதி அன்று, பத்திரங்கள் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும்.வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில், தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். இருப்பினும் சிறு வங்கிகள், ’பேமென்ட்’ வங்கிகள் ஆகியவற்றின் வாயிலாக விற்பனை செய்யப்பட மாட்டாது என நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது.
நிதியமைச்சகத்தின் சார்பாக, ரிசர்வ் வங்கி இந்த தங்க பத்திர வெளியீட்டை மேற்கொள்ளும். பத்திர வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வர்த்தக தினங்களில் இருந்த, 999 சுத்தமான தங்கத்தின் விலையின் சராசரியைக் கொண்டு வெளியீட்டு விலை நிர்ணயிக்கப்படும்.
‘கிரெடிட், டெபிட்’ கார்டு, வலைதளம் அல்லது மின்னணு முறையில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு, 1 கிராமுக்கு, 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015, நவம்பரில், இந்த தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது. இதில், தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம். 1 கிராம் தங்கம், 1 யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும்.
தனிநபர்கள் அதிகபட்சமாக, 4 கிலோ தங்கம் வரை இந்த பத்திரங்களில் முதலீடு செய்யலாம். அறக்கட்டளைகள் போன்றவை, 20 கிலோ வரை முதலீடு செய்யலாம். பத்திரத்தின் காலம் 8 ஆண்டுகள் ஆகும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|